தி.மு.க.,வினர் வெடித்த பட்டாசு குடிசையில் தீ

திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில், நேற்று முன்தினம், மாதவரம் தொகுதி செங்குன்றத்திற்கு வந்தார்.

அவருக்கு, அத்தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதனால் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து, அலமாதி காலனியில் பிரசாரத்திற்கு சென்றபோது, வேட்பாளரை வரவேற்க, தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தனர். அதில், இருந்து பறந்த தீப்பொறி, அருகில் இருந்த குடிசை வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்தது.

இதையடுத்து, கட்சியினருடன் சோழவரம் போலீசாரும் சேர்ந்து, தண்ணீரை ஊற்றி உடனடியாக தீயை அணைத்தனர். குடிசையின் ஒரு பகுதி சேதம்அடைந்தது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்