சீனாவை எதிர்க்க துணிவில்லை, கச்சத்தீவு பற்றி பேசலாமா: ஸ்டாலின் கேள்வி

"ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் பா.ஜ.,வை தி.மு.க., எதிர்க்கும். பழனிசாமி போல் சாக்கு சொல்ல மாட்டோம்" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலுாரில் தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தல் வந்தால் மட்டும் வருபவர்கள் நாங்கள் கிடையாது. மக்களோடு மக்களாக துணை நிற்போம். பொய்களையும் அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு வருகிறார், மோடி.

மக்களுக்கு நன்மை செய்யும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் துரோகம் செய்யும் பார்ட் டைம் அரசியல்வாதிகளை மக்களை புறக்கணிக்க வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை, விலையில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தி.மு.க., அரசு நிறைவேற்றியுள்ளது.

தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் நீக்கம், ஜி.எஸ்.டி., வரியில் மாற்றம், டோல்கேட் மூடல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்துவது, வங்கிகளில் மினிமம் பேலன்ஸை நீக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றப்படும்.

சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக தொடந்து செயல்படும் இயக்கமாக தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மை மக்களின் முதுகில் குத்தியவர் பழனிசாமி, இப்போது பா.ஜ.., வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு புதிதாக அக்கறை வந்தது போல நடிக்கிறார்.

அ.தி.மு.க.,வும் பா.ம.க.,வும் ஆதரித்ததால் தான் நாட்டில் சி.ஏ.ஏ., நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வளவு துரோகத்தை செய்துவிட்டு, 'இப்போது எதிர்க்கிறோம்' எனச் சொல்வது பசப்பு நாடகம்.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தபோது, தி.மு.க., எம்.பி.,க்கள் கடுமையாக போராடினர். ஆனால், 'எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்' என பழனிசாமி பேசினார்.

இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய 8000 பேர் மீது வழக்கு போட்டு மோடிக்கும் அமித்ஷாவுக்கும் விசுவாசத்தை காட்டினார், பழனிசாமி. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சி.ஏ.ஏ., ரத்து செய்யப்படும்.

'நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்... எப்படி மோடியை எதிர்க்க முடியும்' என்கிறார் பழனிசாமி. மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவந்த போது பா.ஜ., காலில் விழுந்து கிடந்தாரா?

ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் பா.ஜ.,வை தி.மு.க., எதிர்க்கும். பழனிசாமி போல் சாக்கு சொல்ல மாட்டோம். மாநிலங்களே இல்லாமல் ஆட்சி செய்ய மோடி நினைக்கிறார். மாநில உரிமைகளை மோடி பறிக்கிறார். தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்களை தர மறுக்கிறார்.

விளம்பரத்திற்காக ஊருக்கு தகுந்த உடையை மட்டும் சரியாக அணிந்து செல்கிறார் பிரதமர். சம்ஸ்கிருதத்திற்கு அள்ளித் தருகிறார், தமிழ் மொழிக்கு கிள்ளி தருகிறார்.

எத்தனை முறை இலங்கைக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை அதிபரை சந்தித்த போது கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தம் என அவர் சொல்லவில்லையே ஏன்?

கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கை மனுவையாவது படித்து பார்த்தார்களா. 2015ல் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது கிடையாது என தகவல் கொடுத்தனர். தேர்தல் வருவதால் தகவல்களை மாற்றி அந்தர் பல்டி அடிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக பார்லிமென்ட்டில் எத்தனையோ முறை கச்சத்தீவு பற்றி கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தரவில்லை. தகவல் அரியும் உரிமை சட்டத்தின் படி எப்படி தவறான தகவல் தந்தனர்?

பா.ஜ.,வை சேர்ந்த தனிநபருக்கு எந்தவகையில் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கொடுத்தனர். கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த போது இலங்கையை பிரதமர் கண்டிக்கவில்லை.

அருணாச்சலில் உள்ள பல பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது, 30க்கும் மேற்ப்ட்ட இடங்களுக்கு பெயர் வைத்துள்ளது. இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சனத்தில் கச்சத்தீவு பற்றிப் பேசலாமா?

டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்க்கன்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் மீதான கைது நடவடிக்கைகள், எவ்வளவு பெரிய தவறு என்பதை பா.ஜ., விரைவில் உணரப்போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Raja - chennai, இந்தியா
03-ஏப்-2024 16:47 Report Abuse
Raja மீனவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த தேர்தலில் பிஜேபி க்கு வாக்களித்தால் கச்ச தீவு பிரச்சினை முடிவுக்கு வரும். குறிப்பாக கிருத்தவ மீனவர்கள், தேவாலய பாதிரிகளின் பேச்சை புறக்கணித்து பிஜேபி க்கு வாக்களித்து தமக்கு தாமே உதவி கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.
Raja - chennai, இந்தியா
03-ஏப்-2024 16:45 Report Abuse
Raja தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதார பிரச்சினை தீரும். அதை விடுத்தது சிறுபிள்ளை தனமாக பேசுபவர் நமது முதல்வராக தொடர்வது, வாக்களித்த மக்கள் தமக்கு தாமே ஆப்பாகத்தான் பார்க்க முடியும்.
Dharmavaan - Chennai, இந்தியா
03-ஏப்-2024 15:23 Report Abuse
Dharmavaan திருட்டு கூட்டம் பிடித்தவுடன் கோபம் வருகிறது . தமிழக மீனவர்களுக்கு நாட்டில் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆகிவிட்டது
sankaran - hyderabad, இந்தியா
03-ஏப்-2024 15:19 Report Abuse
sankaran நீங்கள் கட்ச தீவை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதலாமா?..
Sridhar - Jakarta, இந்தோனேசியா
03-ஏப்-2024 14:56 Report Abuse
Sridhar முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவது தமிழகத்தில்தான் நடக்கமுடியும் சீனா நம் பகுதிகளை ஆக்கரமித்ததாகவே இருக்கட்டும், அதற்குவேண்டி மோடி சீறி உடனே நடவடிக்கை எடுத்தால் நஷ்டம் அவுருக்கா, விளைவுகள் என்னவாகும் என்றுகூட கணிக்கத்தெரியாத துண்டுசீட்டுகளை நாம் முதல்வர் பதவியில் அமர்த்தியிருக்கிறோம் எதிரியின் ஆக்கிரமிப்புக்கு சீறுவது வேறு, நாமாகவே முன்வந்து தாரைவார்ப்பது வேறு என்று கூடவா தெரியாது ஒரு முதலமைச்சருக்கு? அதுமட்டுமல்ல, தாரைவார்த்துவிட்டு முதலை கண்ணீர் வடித்து எதோ எங்களுக்கு தெரியாமல் மத்திய அரசு செய்துவிட்டார்கள் என்று போலி நாடகம் ஆடினீர்களே, அதுவும் எப்படி, கொஞ்சமாக எதிர்ப்பை பெயரளவிற்கு தெரிவித்துக் கொள்கிறோம், வேறு யாரும் எதிர்க்காமல் பார்த்துக் கொள்கிறோம்னு உத்தரவாதம் கொடுத்துவிட்டு, என்னமாதிரி எல்லாம் டிராமா போட்டிருக்கிறார்கள் இந்த திருட்டு கும்பல்? இவ்வளவு செஞ்சிட்டு மூஞ்சிய தூக்கிகிட்டு ஊர் ஊரா வெக்கமே இல்லாம வோட்டு கேக்க போயிட்டிருக்கார். தமிழக மக்களும் அதை கண்டுகளிக்க கூடுகிறார்கள் நியாயமா பாத்தா என்ன செஞ்சிருக்கணும்னு நான் சொல்ல தேவையில்லை.
A1Suresh - Delhi, இந்தியா
03-ஏப்-2024 14:19 Report Abuse
A1Suresh அருணாசல பிரதேசத்திற்கு " பாரத் ஜோடோ நியாய யாத்திரை" ஏன் யாத்திரை செல்லவில்லை.
G.Kirubakaran - Doha, கத்தார்
03-ஏப்-2024 13:25 Report Abuse
G.Kirubakaran சீனாவுக்கு உதவி செய்யும் திராவிடம் ,என்றுமே நாட்டிற்கு எதிரானது
sridhar - Chennai, இந்தியா
03-ஏப்-2024 13:17 Report Abuse
sridhar மற்ற மதங்களை பற்றி பேச துணிவில்லை, ஹிந்து மதத்தை பற்றி மட்டும் பேசலாமா. மற்ற ஜாதிகள் பற்றி பேச துணிவில்லை , ப்ராஹ்மணர்கள் பற்றி மட்டும் பேசலாமா. திமுக ஒழிக.
MUTHUMANI S - TRICHY, இந்தியா
03-ஏப்-2024 12:37 Report Abuse
MUTHUMANI S " திருடர்கள் மாடல் ஆட்சி " தொடரவும் எங்களுக்கு வாக்களியுங்கள்
Balamurugan - coimbatore, இந்தியா
03-ஏப்-2024 12:13 Report Abuse
Balamurugan கச்சத்தீவை விட்டுக்கொடுத்தாதே உங்க அப்பா தான். இதுல பேச்சு வேற. எங்களை எல்லாம் பாத்தா கேன ...... மாதிரி தெரியுதா?
மேலும் 28 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்