Advertisement

அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவது வீண்: பா.ம.க., கருத்து

பா.ம.க., போட்டியிடும் 10 தொகுதிகள் மட்டுமல்லாது, தமிழகம் முழுதும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டால், ஓட்டுகள் பிரிந்து தி.மு.க., தான் வெற்றி பெறும். எனவே, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, தங்களின் ஓட்டை வீணாக்காமல் பா.ஜ., - பா.ம.க., கூட்டணிக்கு ஓட்டு போடுமாறு பா.ம.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் சோழிங்கநல்லுாரில் தென் சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரசாரம் செய்த அன்புமணி, 'மத்தியிலும், மாநிலத்திலும் அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக இல்லை. அ.தி.மு.க.,வுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. எனவே, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, ஓட்டை வீணாக்காமல், பா.ஜ., -- பா.ம.க., கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள்' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்