இ.பி.எஸ்.,க்கு திருஷ்டி அ.தி.மு.க., சென்டிமென்ட்

லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, திருச்சியில் துவங்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., திட்டமிட்டார். அதற்கு நேற்று முன்தினம் சேலத்தில் புறப்பட்ட அவரது கார், மதியம், 1:30 மணிக்கு நிலவாரப்பட்டியில் நின்றது. அங்கு, அ.தி.மு.க., மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து, இ.பி.எஸ்.,க்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வெண் பூசணியில் திருஷ்டி சுற்றி வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறுகையில், '2023ல் மதுரையில் நடந்த மாநாட்டுக்கு சென்ற, இ.பி.எஸ்.,க்கு நிலவாரப்பட்டியில் வரவேற்று, வழி அனுப்பினோம். மாநாடு வெற்றிகரமாக அமைந்தது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவங்க சென்றதால், அவருக்கு திருஷ்டி சுற்றி வழி அனுப்பினோம். எங்க ஊர் சென்டிமென்ட்டால், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும்' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்