கரூரை கைப்பற்ற அ.தி.மு.க., வியூகம்

கரூர் எம்.பி., தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஆகிய சட்டசபை தொகுதிகள் தி.மு.க., வசமும், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சியான, மனிதநேய மக்கள் கட்சி வசமும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி, அ.தி.மு.க., வசமும் உள்ளன.

வரும் தேர்தலில் கரூர் தொகுதி காங்., கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஜோதிமணிக்கு காங்., கட்சியில் உள்ள எதிர்ப்பு, தி.மு.க.,வினரிடம் மோதல், பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாமை போன்ற காரணங்களை முன் வைத்து, கரூர் தொகுதியில் வெற்றி பெற, அ.தி.மு.க., பிரசார வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளனர்.

விராலிமலை தொகுதியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இதனால், ஜோதிமணி மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடும்பட்சத்தில், தொகுதியை ஏழாவது முறையாக கைப்பற்ற, அ.தி.மு.க.,வினர் சுறுசுறுப்பாக, தேர்தல் பணிகளை துவங்கியுள்ளனர். அதற்காக புதிய வகை பிரசார உத்திகளையும், டிஜிட்டல் பிரசாரத்தையும் துவங்கியுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்