மக்கள் மனசில யார்?

தொழிற்சாலைகள் தேவை



ஆட்சிக்கு வருவோர், மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். அதனால், உள்ளூர் அளவில், வேலை வாய்ப்பு பெருகும். இதுபோன்ற திட்டங்களை முன்னெடுத்தால், அவர்களுக்கே என் ஆதரவு. இலவசம், நிவாரணம் தருவதை தவிர்க்க வேண்டும்.

- எஸ்.கார்த்திகேயன், 36, சூளைமேடு, சென்னை.

வேலைவாய்ப்பு அவசியம்



ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை, அரசு கொண்டு வரவேண்டும். படித்த பட்டதாரிகளில் பலர், வேலைவாய்ப்பின்றி, சாதாரண வேலைகளுக்கு செல்கின்றனர். வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிக்கே என் ஓட்டு.

- ஜே.தேவா, 24, கோடம்பாக்கம், சென்னை.

அ.தி.மு.க.,வுக்கே ஆதரவு!



ஜெயலலிதா தலைமையிலான அரசால், பலவித நன்மைகளை நாங்கள் அடைந்தோம். தற்போது இல்லத்தரசிகளுக்கு, 1,500 ரூபாய், இலவச சிலிண்டர் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளதால், அ.தி.மு.க.,வுக்கே எங்களின் ஆதரவு தொடரும்.

-ஆர்.வடிவேல், 42, கைத்தறி நெசவாளர், பல்லடம்.

பொய் வாக்குறுதி வேண்டாம்!



பொய்யான வாக்குறுதிகள் தருவதை அரசியல் கட்சிகள், முதலில் நிறுத்த வேண்டும். அவர்கள் தரும் வாக்குறுதிகளில், 50 சதவீதம் நிறைவேற்ற முடியாதவை. நியாயமான வாக்குறுதிகளை தரும் கட்சிக்கே, முக்கியத்துவம் தந்து ஓட்டு போடுவேன்.

- ஜி.கோபால், 32, கொங்கணகிரி, திருப்பூர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)