'வேட்பாளரை தெரியாது; ஓட்டு போடுவோம்'

நீலகிரி மாவட்டம், கூடலுார் சட்டசபை தொகுதியில், குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், பனியர் மற்றும் காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் அடித்தட்டு மக்களாகவே இன்னும் வாழ்ந்து வருகின்றனர். மொத்தமாக, 5,000 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரும்பாலான பழங்குடியின கிராமங்களில், எந்த வேட்பாளர்களும் சென்று ஓட்டு கேட்பது கிடையாது. மாறாக அந்தந்த உள்ளூர் பகுதி அரசியல்வாதிகள் மட்டுமே பழங்குடியின மக்களிடம் ஓட்டு கேட்டு செல்கின்றனர்.

அவர்களின் வாக்குறுதியை நம்பி, அவர்கள் ஓட்டு போடுகின்றனர். பல்வேறு வாக்குறுதிகளை கூறும் உள்ளூர் அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்தவுடன் பழங்குடியின மக்களை திரும்பிப் பார்ப்பது கூட கிடையாது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்