நேர்காணலில் அரசு டாக்டர் நடவடிக்கை என்ன?

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கெங்கவல்லியைச் சேர்ந்தவர் வேலுமணி, 43; தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்;கெங்கவல்லி வட்டார மருத்துவ அலுவலர். கள்ளக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர், 10ம் தேதி நடந்த நேர்காணலிலும் பங்கேற்றார்.

இதுகுறித்து வேலுமணி கூறுகையில், இதுவரை நான்கு முறை நேர்காணலில் பங்கேற்றேன். ஆனால், பணிக் காலத்தில் அரசியல் ரீதியாக நான் செயல்பட்டதில்லை,'' என்றார். ஆத்துார் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் யோகானந்த் கூறுகையில், ''அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகளின்படி விசாரித்து தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்