'வட போச்சே' கவலையில் தி.மு.க.,

சமீபத்தில் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்து தி.மு.க.,வினர் பிரசாரத்தை துவங்கினர். அதில், தி.மு.க.,வினர் மோடி முகமூடி அணிந்தபடி, 'மோடி சுட்ட வடை' என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் மீது, உளுந்த வடையை வைத்து பொதுமக்களிடம் கொடுத்தனர்.

அப்போது பிரதமர் மோடி வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதாகவும், செயலில் ஒன்றும் காட்டவில்லை என்றும் பிரசாரம் செய்தனர். விளைவுகள் நேர்மாறாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கின்றன.
இதுகுறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:

நாங்கள் அளித்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள மோடி படம், கடைக்கோடி மக்கள் வரை சென்றடையத் துவங்கியிருக்கிறது. மேலும், நாங்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாகத்தான் இந்த வடை கொடுப்பதாக மக்கள் நினைக்கத் துவங்கி விட்டனர். மேலும், மோடி தங்களுக்கு வங்கிக் கணக்கு கொடுத்தது போல் இப்போது பசி தீர்ப்பதற்காக வடையும் கொடுத்து விடுகிறார் என்றும் மக்கள் பேசத் துவங்கி விட்டனர்.

இன்னொரு பக்கம், வடையை வாங்கும் மக்கள், எண்ணெய் பிழியக் கொடுத்த பேப்பர் என நினைத்து துண்டுப் பிரசுரத்தில் வைத்து வடையைப் பிழிந்து விட்டு, அதைத் துாரப் போட்டு விட்டனர்.

என்ன நோக்கத்திற்காக இந்தப் பிரசாரத்தை துவங்கினோமோ, அதற்கு நேர் மாறாகப் போய்விட்டது. எப்படியாவது இப்பிரசாரத்தை நிறுத்தி விடுங்கள் என்று கட்சி மேலிடத்தில் கூறி வருகிறோம். அவர்கள் என்ன முடிவு எடுக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்