Advertisement

பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கிறது கொங்குநாடு முன்னேற்ற கழகம்

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதன் பின், அமைப்பின் தலைவர் பெஸ்ட் ராமசாமி அளித்த பேட்டி:கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. ஊழலற்ற ஆட்சியை பார்க்க முடிகிறது.

உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறி யுள்ளது. பேச்சுத் திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். ஒரு நல்ல ஆட் சியை அளித்துள்ள பா.ஜ.,வுக்கு, ஆதரவு தருவதில் எவ்வித தவறும் இல்லை.

கொங்கு மண்டலத்தில் தேவையான அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என் பது தான் எங்கள் எதிர்பார்ப்பு. 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' எங்கள் விருப்பம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்