லோக்சபா தேர்தலில் களமிறங்கும் நிர்மலா, ஜெய்சங்கர்!

'லோக்சபா தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் போட்டியிடுவது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது' என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர், ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் வரும் லோக்சபா தேர்தலில் களமிறங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, ' மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும் ஜெய்சங்கரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அவர்கள் போட்டியிடப் போவது கர்நாடகாவா.. அல்லது வேறு மாநிலமா என்பது முடிவாகவில்லை" என்றார்.

பெங்களூருவில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ' இன்னும் முடிவாகாத நிலையில் பதில் அளிக்க வாய்ப்பில்லை. யார் யார் போட்டியிடுவார்கள் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. பா.ஜ., என்பது தேசிய கட்சி. யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள்' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்