5 பெண்களை நிறுத்தும் பா.ஜ.,

ராஜஸ்தானில், முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு மொத்தமுள்ள, 25 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 19 மற்றும் 26ல், இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மொத்தமுள்ள 25 தொகுதிகளில், பா.ஜ., ஐந்து பெண் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. எதிர்க்கட்சியான காங்., மூன்று பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது.

கரவுலி- தோல்பூர் தொகுதியில், இந்து தேவி ஜாதவ்; நாகவுரில் ஜோதி மிர்தா, ராஜ்சமந்தில் மஹிமா விஸ்வேஷ்வர் சிங், ஜெய்ப்பூரில் மஞ்சு ஷர்மா, கங்கா நகர் தனித் தொகுதியில் பிரியங்கா பாலன்- ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில், ஜோதி மிர்தாவை தவிர, மற்ற நால்வரும் முதல்முறை வேட்பாளர்கள்.

கடந்த 2019 தேர்தலில், ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் ரூரல், நாகவுர், தவுசா ஆகிய இடங்களில், நான்கு பெண் வேட்பாளர்களை காங்., நிறுத்தியது. ஆனால் இந்த முறை, சங்கீதா பெனிவால், சஞ்சனா ஜாதவ், ஊர்மிளா ஜெயின் பாயா ஆகிய மூன்று பெண்களுக்கு மட்டுமே அக்கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. இவர்கள் முறையே, பாலி, பாரத்பூர் மற்றும் ஜாலவர் -பரான் ஆகிய தொகுதிகளில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்