ஸ்டாலின் பேசுவது அரசியல் அநியாயம்: அண்ணாமலை விமர்சனம்

"ஆட்சிக்கு வந்த 33 மாதங்களில் என்ன செய்தோம் என முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை. அதைச் சொல்லாமலேயே வாக்கு சேகரித்து வருகிறார். இதுபோன்ற அநியாயத்தை அரசியல் வரலாற்றில் பார்த்ததில்லை" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

பிரதமர் மோடியின் சிந்தனையை செயல்படுத்தக் கூடிய ஒரு எம்.பி,. வரவேண்டும். வளர்ச்சி என்று மோடி கூறினால், இங்கு இந்த வளர்ச்சி வரவேண்டும். புதிதாக தொழிற்சாலைகள் வரவேண்டும் என்றால், இங்கு தொழிற்சாலைகள் வரவேண்டும்.

லோக்சபா தேர்தலில் 39 இடங்களில் தி.மு.க., கூட்டணி போட்டியிடுகிறது. ஆட்சிக்கு வந்த 33 மாதங்களில் என்ன செய்தோம் என முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை. அதைச் சொல்லாமலேயே வாக்கு சேகரித்து வருகிறார். இதுபோன்ற அநியாயத்தை அரசியல் வரலாற்றில் பார்த்ததில்லை.

தி.மு.க., தனது ஆட்சியில் சரிபாதியை கழித்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் பேசும் தி.மு.க., அமைச்சர்கள், 'பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவார்கள்" என பொய் பேசுகின்றனர். அந்த உரிமைத்தொகை கூட 100 பேரில் 30 பெண்களுக்குத் தான் கிடைக்கிறது.

நாங்களும், மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என சொல்வோம். வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்.

இன்னொரு கட்சி, 'மகளிர் உரிமைத் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்' என்கிறது. பிறகு, நாங்கள் எதற்கு இருக்கிறோம். மக்களை முட்டாள்களாக நினைத்து எவ்வளவு நாள்கள் பேசுவார்கள் எனத் தெரியவில்லை.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


YESPEE - mumbai,இந்தியா
27-மார்-2024 13:46 Report Abuse
YESPEE நீங்கள் உங்களது ஒன்பது ஆண்டுகள் சாதனை பற்றி பேசலாமே அதை விட்டு தி மு கவை ஏன் பேசவேண்டும்
Indian - kailasapuram,இந்தியா
27-மார்-2024 13:44 Report Abuse
Indian உதய சூரியன் ...வெற்றி சின்னம் ..
SIVA - chennai,இந்தியா
27-மார்-2024 08:41 Report Abuse
SIVA ஆம் வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கிறது , அங்கு மக்கள் நல்லவர்களை மாநிலத்தில் ஆட்சியில் அமர்த்துகின்றனர் , அதனால் வடக்கு வாழ்கின்றது .... அங்கும் தகுதியே இல்லாமல் வாரிசுகளை ஆட்சியில் அமர்த்தினால் வடக்கும் தேயும் , அறுபது ஆண்டுகாலம் திராவிடம் இங்கு ஆட்சியில் இருந்தும் ஐம்பது ஆண்டு காலம் மத்தியில் இரு கலகங்களும் கூட்டணியில் இருந்தும் தெற்கு வளர வில்லை என்றால் யார் குற்றம் ..... ..
raja - Cotonou,பெனின்
27-மார்-2024 06:23 Report Abuse
raja திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் பூற டிரக் மாஃபியா குடும்பத்தை (dmk) தமிழர்கள் அடித்து விரட்டுவார்கள் தலைவா...
vaiko - Aurora,பெர்முடா
27-மார்-2024 02:43 Report Abuse
vaiko what stalin did, he need not tell the people. they know them very well. now you tell what modi did for tn in 10 years. nothing.
M Sathya narayanan - Peerkkankarai,இந்தியா
26-மார்-2024 20:26 Report Abuse
M Sathya narayanan well said
Indian - kailasapuram,இந்தியா
26-மார்-2024 14:17 Report Abuse
Indian ஜனநாயகம் வேண்டும் என்றால் தி மு க தான் ..
Indian - kailasapuram,இந்தியா
26-மார்-2024 14:16 Report Abuse
Indian வடக்கு வாழ்கிறது ...தெற்கு தேய்கிறது ....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்