முதல்வர் பழனிசாமி அரசை விரும்பும் மக்கள்: கே.சி.வீரமணி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதி வேட்பாளர் கே.சி.வீரமணி புள்ளநேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மக்கள் மீண்டும் முதல்வர் பழனிசாமி அரசை விரும்புகிறார்கள். எளிமையின் சின்னம் காமராஜரின் மறு உருவம் பழனிசாமி ஆவார். அதுமட்டுமின்றி விவசாயி தமிழகத்திற்கு முதல்வராக கிடைத்திருக்கிறார் என்று உணர்ந்து மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கும் பெற்றுள்ளார். அதன் காரணமாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)