வைரம் பதித்த பேனா எங்கே : பதற்றத்தில் பா.ஜ., வேட்பாளர்

சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் யாதவின் வைரம் பதித்த பேனா தொலைந்து போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவரான தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து. தி.மு.க., கூட்டணி சார்பில் காங்கிரசின் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நேற்று திருப்பத்தூரில் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தேவநாதன் யாதவ் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மைக்கில் ஓர் அறிவிப்பு வெளியானது.

அதில், "தேவநாதன் யாதவின் பேனா ஒன்று கீழே விழுந்துவிட்டது. அதை எடுத்தவர்கள், ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அறிவிக்கப்பட்டது. ஆனால், போனாவை எடுத்தவர்கள் அதை பா.ஜ., வேட்பாளரிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அந்த இடமே பரபரப்பானது.

இது குறித்து பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வைரம் பதித்த அந்தப் பேனாவை சென்டிமென்ட்டாக தன்னிடம் தேவநாதன் யாதவ் வைத்திருந்தார். பிரசாரத்தின்போது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. இதனால் அவர் மிகவும் பதற்றமாகிவிட்டார். இன்னும் பேனா கிடைக்கவில்லை" என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்