பா.ஜ., என்னை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை: சுப்ரமணியன் சுவாமி

"இரண்டு முறை தி.மு.க., ஆட்சியை கவிழ்த்திருக்கிறேன். இப்போது அதற்கான தேவை ஏற்படவில்லை" என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

மதுரையில் பா.ஜ., நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சுப்ரமணியன் சுவாமி வந்திருந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பா.ஜ., வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் நிச்சயமாக வெற்றி பெறுவார். கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

தமிழகத்தில் தி.மு.க., எதிர் பா.ஜ என களம் மாறியுள்ளதா என்று கேட்டால், எல்லாருக்கும் கனவு இருகிறது. அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம். ஆனால், கட்சியின் அமைப்பு வலுவாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். விளம்பரம் செய்தால் போதுமா... மக்கள் நம்ப வேண்டும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொருளாதாரீதியாக நாடு முன்னேற்றம் அடையவில்லை. வெளியுறவு கொள்கையிலும் அரசு சிறப்பாக செயல்படவில்லை. சீன ஆக்ரமிப்பை தடுக்கவில்லை. மாலத்தீவுடனும் பிரச்னை உள்ளது. இதற்கெல்லாம் மோடி ஒன்றுமே செய்யவில்லை.

பா.ஜ., அழைத்தால் பிரசாரத்துக்கு செல்வேன். ஆனால், என்னை அவர்கள் அழைக்கவில்லை. மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரக் கூடாது. இரண்டு முறை தி.மு.க., ஆட்சியை கவிழ்த்திருக்கிறேன். இப்போது அதற்கான தேவை ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
26-மார்-2024 05:53 Report Abuse
Kasimani Baskaran தீம்காவிடம் கூட்டு வைக்கவில்லை என்ற குறை சு.சாமிக்கு உண்டு. முகவின் தலைமையிலான கட்சி வேறு ஸ்டாலினின் தலைமையிலான கட்சி வேறு என்பதை அறிந்தவர்களில் இவரும் ஒருவர்.
Sampath Kumar - chennai, இந்தியா
25-மார்-2024 11:48 Report Abuse
Sampath Kumar மிஸ்டர் உங்களை எல்லாம் பிஜேபி காரன் ஓரம் கட்டி பழவர்சம் ஆச்சு அது கூட புரியாமல் அந்த கட்சில நீங்க இருப்பது தான் காமெடி
Palanisamy Sekar - Jurong-West,
25-மார்-2024 09:34 Report Abuse
Palanisamy Sekar காமெடியர்கள்
GANESUN - Chennai, இந்தியா
25-மார்-2024 08:06 Report Abuse
GANESUN கூப்பிடாட்டி பரவாயில்லை நீங்கள் இருக்கும் தொகுதியில் சொந்த காசில் பிஜேபிக்கு ஓட்டு போடுங்கள் என்று 2000 பிட் நோட்டீஸ் அடித்து வினியோகம் செய்யலாமே.. தொண்டு செய்ய அழைப்பு தேவையில்லை..
M.S.Jayagopal - Salem, இந்தியா
24-மார்-2024 19:14 Report Abuse
M.S.Jayagopal வழக்கம்போல் விரக்தியில் ஏதேதோ பேசியுள்ளார்.இவரால் களத்தில் கடின உழைப்பும் செய்ய முடியாது.தேச நலன் கருதி, பாஜாகாவிற்கு ஆக்கபூர்வமாக, தம்மால் முடிந்த பணியை செய்யலாம்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்