வி.ஐ.பி., தொகுதிகளில் ஒன்றான தொண்டாமுத்துார் தொகுதியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி களம் காண்கிறார்.
இந்த தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என, அறிவாலயத்திலிருந்து தலைமை நிலைய நிர்வாகிகள் பூச்சிமுருகன், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொகுதியின் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து கட்சித் தலைமையிலிருந்து பூச்சி முருகனுக்கு தனி வியூகம் அமைத்து செயல்பட உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், நாசர் அணி வெற்றி பெற வியூகம் அமைத்து கொடுத்து வெற்றி கண்ட பூச்சிமுருகனுக்கு, தொண்டாமுத்துார் தொகுதியை தி.மு.க., வெற்றி பெற அவரது வியூகம் கைக்கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக, தொகுதி நிலவரம் குறித்து பூச்சி முருகன் கூறியதாவது:
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் நல்ல பலனை தந்துள்ளது. , அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைச் சூழலையே மேம்படுத்தும் வகையிலான எங்களது தேர்தல் அறிக்கை இரண்டும் தமிழக மக்களின் மனங்களில் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்திலும் பார்க்கிறேன்.
தினமும் குறைந்தது ஆயிரம் பேரை சந்தித்து வருகிறேன். பூத் கமிட்டிகளில் இருக்கும் 13 உறுப்பினர்களில் குறைந்தது, 10 பேராவது சந்தித்து பேசுகிறேன். இதுவரை ஏழாயிரம் பேரை சந்தித்துள்ளேன். எதிரணியிரனரின் சட்டவிரோத ஓட்டுக்கள் போடும் நடவடிக்கைகளை சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளோம். மிகப்பெரிய வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உழைத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து