தனிச்சின்னம் கிடைத்தால் தான் துரை போட்டி

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படும். அதில், வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுவார் என்றும் அக்கட்சியினர் உறுதியாக நம்பி வருகின்றனர். அதனால், துரை வைகோ தங்குவதற்கும், கட்சி அலுவலகத்திற்கும் திருச்சியில் வசதியான வீடுகள் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ம.தி,மு.க.,வுக்கு தனிச் சின்னம் வழங்கும் வாய்ப்பு குறைவு தான்; உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, திருச்சி தொகுதியில் துரை வைகோவிற்கு பதிலாக, டாக்டர் றொக்கையாவை வேட்பாளராக்குவது பற்றி ஆலோசித்து வருகிறது.

தனிச் சின்னத்தில் போட்டி என்றால், துரை வைகோ களம் இறங்குவார்; இல்லாவிட்டால், மண்ணின் மைந்தரான டாக்டரே களம் இறக்கப்படுவார் என்று ம.தி.மு.க., வினர் தெரிவிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்