காங்கிரஸ், ம.தி.மு.க., தொகுதிகள் எவை : நாளை வெளியாக வாய்ப்பு

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில், காங்கிரஸ், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகள் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய 3 நாட்களே உள்ளன.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள், வி.சி., இ.கம்யூ., மா.கம்யூ,. ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கொ.ம.தே.க., முஸ்லிம் லீக், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுவரை, வி.சி.,, கொ.ம.தே.க., முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், ம.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ்,ம.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை இளைஞர்கள், பெண்கள், புதுமுக வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்