மக்கள் மனசில யார்?

விலைவாசி குறைய வேண்டும்




பெட்ரோல், டீசல், காஸ், சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. என்னை போன்ற சிறு வியாபாரிகள், வருவாய் ஈட்டுவது கடினமாக இருக்கிறது. விலை வாசி உயர்வை, யார் கட்டுக்குள் கொண்டு வருகின்றனரோ, அவர்களுக்கே என் ஓட்டு.

- ஜெ.கமலக்கண்ணன், 46, மிட்டாய் வியாபாரி, காஞ்சிபுரம்.

ஓட்டுக்கு பணம் கூடாது:



ஓட்டளிக்கும் முன், வேட்பாளர்களின் ஜாதி, மதம் பார்க்காமல், முந்தைய காலகட்டங்களில், அவரின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பார்க்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்காதவரே நல்ல வேட்பாளர். அவருக்கே என் ஆதரவு உண்டு.

- பானுப்ரியா, 37, பேராசிரியை, விருதுநகர்.

முன்னுரிமை தருகிறது அரசு



கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்புகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அதேபோல, தனியார் நிறுவனங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் வேலைவாய்ப்பு தர வேண்டும். அதை செய்யும் கட்சிக்கே ஓட்டு.

- ஒய்.அபினேஷ், 19, மாற்றுத்திறனாளி, காஞ்சிபுரம்.

ஏழைகளுக்கு உதவ வேண்டும்



தேர்தல் வரும் போது மட்டும், வாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்கின்றனர். எம்.எல்.ஏ., ஆன பின் தொகுதி பக்கம் வருவதே இல்லை. குடிநீர், சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பவர்களுக்கே என் ஓட்டு.

- மஞ்சுளா, 40, குடும்ப தலைவி, சிவகாசி.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)