பிரதமர் மோடிக்கு, நாடே குடும்பம் தான் : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

"தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடிக்கு நாடே குடும்பம் தான்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

சென்னை நந்தனத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இந்திய அரசியலை அடிப்படையில் இருந்து பிரதமர் மோடி மாற்றி இருக்கிறார். தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். மோடிக்கு குடும்பம் இல்லை என லாலு பிரசாத் யாதவ் கூறுகிறார். 142 கோடி மக்களும் பிரதமர் மோடியின் குடும்பத்தில் உள்ளனர். நாம் அனைவரும் மோடியின் குடும்பம் என உரக்க சொல்வோம்.

தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடிக்கு நாடே குடும்பம் தான். திமுக உள்ளிட்ட வாரிசு அரசியல் செய்யும் குடும்ப கட்சிகளை லோக்சபா தேர்தலில் அகற்ற வேண்டும். ஒரு பேய் ஆட்சி செய்தால் நாடு எப்படி இருக்குமோ தி.மு.க., அட்சி அப்படி இருக்கிறது.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறுவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்திய அரசியலில் அடுத்த 60 நாட்கள் முக்கியமானது ஆகும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை பிரதமர் மோடி கையில் வைத்துள்ளார். தமிழகத்தில் இருந்து 39 உறுப்பினர்களை பார்லிமென்டுக்கு அனுப்பி வைப்பது நமது கடமை.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்