கமலுக்காக காத்திருக்கும் கோவை : களநிலவரம் என்ன?

2021 சட்டசபை தேர்தலில் முதல் முதலாக களம் இறங்கி, கோவை தெற்கில் வெற்றியை 'ஜஸ்ட் மிஸ்' பண்ணியவர், கமல். அதனால், விட்ட இடத்திலேயே பெரிதாகப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், கோவை லோக்சபா தொகுதியைக் குறி வைத்துள்ளார். கமல். .தி.மு.க., கூட்டணியில் அவர் தான் போட்டியிடப் போகிறார் என்ற பேச்சு, பல நாட்களாக அடிபட்டு வருகிறது. ஆனால் வெற்றியின் வெளிச்சத்துக்கு டார்ச் லைட் போதாது; உதயசூரியனும் வேண்டுமென்ற குழப்பத்தில் கொஞ்சம் இழுக்கிறது.

கமலே வேண்டாம் என்று சொன்னாலும், அவரை தி.மு.க., தலைமை விடுவதாயில்லை. காரணம், அங்கே நிற்பதற்கு உருப்படியான ஓர் உடன்பிறப்புமில்லை. மறுபடியும் மா.கம்யூ.,க்குத் தொகுதியை ஒதுக்கினால், இந்த முறை மண்ணைக் கவ்வி விடுவோமென்ற அச்சம் உள்ளது. கோவை எம்.பி.,நடராஜனின் கடந்த ஐந்தாண்டு காலப் பணி அந்தளவுக்கு, பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

தி.மு.க., சார்பில் நின்றால், கூட்டணி பலத்தில் இப்போது ஜெயித்து விடலாம் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் ஜெயித்தாலும் டில்லிக்குப் போய் என்ன செய்வது என்று பலரும் ஒதுங்குகின்றனர்.

அ.தி.மு.க.,விலும் அதே நிலைதான். கோவை எங்கள் கோட்டை என்று அக்கட்சியினர் மார்தட்டினாலும், இந்தத் தேர்தலில் நிற்பதற்கும், செலவழிப்பதற்கும் அங்கேயும் யாரும் தயாராக இல்லை என்பதே நிஜம்.

இப்போதைக்கு, கோவையில் போட்டியிட பா.ஜ.,வில் மட்டும் தான் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். தங்களுக்கு தெரிந்த வட்டாரங்கள் மூலமாக சீட் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

கமல் கோவையில் போட்டியிடுகிறாரா என்பதை பொறுத்தே, எல்லாமே முடிவாகும்! ஆக...கமலுக்காக கோவை வெயிட்டிங்!



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்