'கண்காணிக்கிறோம்' பா.ஜ., எச்சரிக்கை

தமிழகத்தில் பா.ஜ., 19 தொகுதிகளில் நேரடியாகவும்; அக்கட்சியின் தாமரை சின்னத்தில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். இன்னும் சில தினங்களில் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உட்பட பலர் தமிழகத்திற்கு வர உள்ளனர்.

தமிழகத்தில் நடக்கும் பணிகள் குறித்து, டில்லி மேலிட தலைவர்கள் தொலைபேசி மற்றும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தினமும், தமிழக நிர்வாகிகளிடம் கேட்டு வருகின்றனர். சில மூத்த நிர்வாகிகள், டில்லியில் உள்ள மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு, 'வேட்பாளர்களும், முக்கிய நிர்வாகிகளும், தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தராமல் உள்ளனர்; தேர்தல் பிரசார பணியில் ஈடுபடுத்துவதில்லை' என்று தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம், 'டில்லியில் இருந்தாலும், தமிழகத்தில் நடக்கும் தேர்தல் பணிகளை, 1,000 கண்களால் கண்காணித்து வருகிறோம்; அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; எங்களை ஏமாற்ற வேண்டாம்' என, கட்சி மேலிட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்