2015ல் பா.ஜ., அரசே ஒப்புக் கொண்டது: கச்சத்தீவு குறித்து ப.சிதம்பரம்

"வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் கூட தமிழக மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையா?" என, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசுக்கு 1974ல் கச்சத்தீவை இந்திய அரசு தாரைவார்த்துக் கொடுத்ததால், இன்று வரையில் இலங்கை கடற்படையால் ஏராளமான தொல்லைகளுக்கு தமிழக மீனவர்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கச்சத்தீவு தொடர்பாக ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவல்களை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 31) வெளியிட்டார்.

இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களுக்காக தி.மு.க., எதையும் செய்யவில்லை.

காங்கிரசும் திமுகவும் குடும்ப அமைப்புகள். அவர்களின் மகன், மகள்கள் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை கொள்வார்கள். கச்சத்தீவு மீதான அவர்களின் அக்கறையின்மையால் ஏழை மீனவர்களும் மீனவப் பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பழிக்கு பழி என்பதெல்லாம் பழைய ஆயுதம். கடந்த 2015 ஜனவரி 27ல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆர்.டி.ஐ., தகவலில், 'கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது' என இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சகமும் மாற்றிப் பேசுவது ஏன்? ஆர்.எஸ்.எஸ்.,- பா.ஜ.,வின் ஊதுகுழலாக ஜெய்சங்கர் செயல்படுகிறார்.

பல இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அரசு இலங்கையிடம் பேச்சு நடத்தி மீனவர்களை விடுவித்துள்ளது.

காங்கிரஸ்-தி.மு.க., வுக்கு எதிராக ஜெய்சங்கர் பேசுவதற்கு என்ன காரணம். வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் கூட தமிழக மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையா. மோடியின் ஆட்சியில் கூட மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையா?

இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


A1Suresh - Delhi, இந்தியா
03-ஏப்-2024 14:22 Report Abuse
A1Suresh சிதம்பர்ம் காப்பியடித்து பாஸ் செய்தவர் போலும். இவருக்கு கேள்வியே புரியவில்லை
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
02-ஏப்-2024 22:16 Report Abuse
R.MURALIKRISHNAN தொகுதிக்கு கொடுக்கும் மொத்த பைசாவையும் ஒத்த பைசா பாக்கியில்லாமல் வீட்டுக்கு கொண்டு செல்லும் சிதம்பரம் அண்ட் கோ வை விரட்டிலாப்போம்
Sridhar - Jakarta, இந்தோனேசியா
02-ஏப்-2024 13:16 Report Abuse
Sridhar உண்மையாலுமே இவர் படித்தவர்தானா? ஜெய்ஷ்ங்கர் அப்போது கச்ச தீவு இலங்கைக்கு சொந்தம் என்றார், ஆமாம் இப்போவும் அது இலங்கையிடம்தான் இருக்கிறது. அதில் என்ன சந்தேகம். கேள்வியே அதை நீங்கள் தாரைவார்த்து கொடுத்தது பற்றிதானே? அன்றைக்கு கருணாநிதி செஞ்ச எம் மாறித்தனம் பற்றிய விவரங்கள் பொதுவெளியில் இல்லை. இப்போ இருக்கு. அதப்பத்தி சொல்றாரு. கருணாநிதிக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டு அந்த ஆளோட சம்மத்தோடதான் இந்திரா காந்தி தாரை வாத்து கொடுத்திருக்கங்கங்கற விஷயம் வெளில வந்துடுச்சு. அதுமட்டுமில்ல, கட்டுமரம் செஞ்ச டகாலடித்தனம் அதாவது நான் எதிர்ப்பு தெரிவிக்கற மாதிரி பாவலா பண்றேன் ஆனா பெருசா எதிர்ப்பு வராதமாதிரி பாத்துக்கறேன்னு சொன்ன விஷயமும் வெளியே வந்துடுச்சு. பாக்கப்போனா, இந்த மேட்ரதான் பிஜேபி முன்னிலை படுத்தனும். தாரை வார்த்துக்கொடுத்தது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே? அதுக்கு பின்னால இருக்குற இந்த கபட நாடகங்களை தான் முக்கியமா போகஸ் செய்யணும். அதைவிட்டுட்டு எதையோ பேசிக்கிட்டுருக்கானுங்க.
veeramani - karaikudi, இந்தியா
02-ஏப்-2024 09:57 Report Abuse
veeramani ராம்நாத் மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு மைய்ய அரசின் ஓய்வே ஊழியரின் கருத்து. அறுபது, எழுபதுகளில் தலைமன்னாரில் இருந்து இலங்கை தமிழர்கள் ராமவ்ஸ்வரம் தீவுக்கும் ராம்நாட்டிற்கும் வந்து போவது கேள்விப்பட்டுள்ளேன். விடுதலை புலிகள் பிரபாகரன் சர்வாதிகாரம் துவங்கிய நாளில் இருந்து பாக் ஜலசந்தி கடுமையாக கண்காணிக்கப்பட்டது. மேலும் அன்றைய பாரத பிரதமர் திரு ராஜின் காந்தியை கொடுமையான கொலை செய்த விடுதலை புலிகள் , பெங்களூரில் தலைமறைவாக இருந்து பின்னர் அளிக்கப்பட்டபின்னர் இந்த கடல் பகுதி முழுவதும் மிக கடுமையாக கவனம் செலுத்தப்பட்டது. ஒரே ஒரு கேள்வி.. எழுபதுகளில் தங்கச்சிமடம், மண்டபம், ரேஸ்வரம், தனுசுகோடி கிராமங்களில் வசித்த அன்றைய மீனவர்கள் எவரும் இப்போது கடலுக்கு செல்வதேயில்லை. தற்போதைய மீனவர்கள் கன்யாகுமரி, தூத்துக்குடி, கேரளா பகுதிகளில் இருந்து சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டவர்கள். இவர்களுக்கு எங்களது தொப்புள்கொடி உறவு பற்றி என்ன தெரியும். தலைமன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தமிழ் குடும்பங்கள் ராம்நாத் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் பகுதிகளில் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துஉள்ளனர். எழும் இலங்கை மீனவர்களும் தமிழ் பேசும் ஸ்ரீலங்கா நாட்டினர். தற்போதைய தமிழ்நாட்டின் மீனவர்கள் ஸ்ரீலங்கா பகுதிகளில் சென்று வலைகளை போட்டு ஸ்ரீலங்கா தமிழ் மீனவர்களின் வாழ்க்கை ஆதாரத்தை திருடிகொண்டுவருகின்றனர். இதை ஸ்ரீலங்கா நாட்டினர் முதலில் எச்சரிக்கை செய்து பின்னர் தான் சிறையில் அடைகின்றனர். இது தெரியாமல் மீடியாக்களும் தவராக செய்தி வெளியிடுகிறார்கள். ஒரு நல்ல செய்தி... தமிழ் பேசும் இந்திய மீனவர்கள் இப்போது சுடப்படுவது இல்லை.
R SRINIVASAN - chennai, இந்தியா
02-ஏப்-2024 08:37 Report Abuse
R SRINIVASAN சிதம்பரம் முழு பூசணிக்காயை சோத்றில் மறைக்கிறார் .1976-ல் m.g.r.ம் m.கல்யாணசுந்தரமும் கொடுத்த ஊழல் புகாரை வைத்து இந்திரா காந்தி சர்க்காரியா கமிஷனை அமைத்து அதன் அடிப்படையில் கருணாதி அரசை மோகன்லால் sugathiyavai. தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனம் செய்து கருணாநிதி ஆட்சியை கலைத்தார் .அதன்பின் 1977-ல் தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அவர்களின் நேர்மையான ஆட்சியை 1980-ல் சரண் சிங்குக்கு ஆசை காண்பித்து அவரை பிரதமராகி பின்பு அந்த ஆட்சியும் கலைக்கப்பட்டு மறுபடியும் தேர்தல் அறிவிக்கப்பட்டது .உளவுத்துறை மூலம் மறுபடியும் இந்திரா காந்தியே வருவார் என்று அறிந்து அவரைப்பார்த்து சர்க்கரிய கமிழனிலிருந்து தான்னை விடுவிக்க கருணாநிதி கேட்டுக்கொண்டார் .அதற்கு இந்திரா காந்தி அவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதியை வலியுறுத்தினார்
vbs manian - hyderabad, இந்தியா
02-ஏப்-2024 08:34 Report Abuse
vbs manian இந்திராகாந்திக்கு பயந்து கருணாநிதி ஒப்புக்கொண்டது இப்போது தெரிந்து விட்டது. இருவரும் சேர்ந்து தானம் செய்து விட்டார்கள். இப்போது கச்சத்தீவை மீட்பேன் என்று கழகம் கூவுகிறது. யாரை ஏமாற்ற.
shyamnats - tirunelveli, இந்தியா
02-ஏப்-2024 08:30 Report Abuse
shyamnats தேவை இல்லாமல் கான்கிராஸ் - இந்திரா அம்மையார்- கச்ச தீவை தாரை வார்த்தார். சுய நலத்திற்காக தி மு க - கருணாநிதி துணை போனார். யாவரும் அறிந்ததே. ப சி யார் பக்கம் பேசுகிறார் என்றே புரியவில்லை. இப்பொலோதாவது மீட்டெடுக்க வழி பார்க்க வேண்டும்.
Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
02-ஏப்-2024 05:57 Report Abuse
Kasimani Baskaran நுணல் தனது வாயால் தனது அறியாமையை வெளிப்படுத்துகிறது. இந்திய மீனவர்களின் மீன்பிடி வலை உலர்த்தும் உரிமையை ஏன் காங்கிரஸ் அரசு விற்றது? தேச விரோத நடவடிக்கை என்றால் முன்னால் நிற்பது காங்கிரஸ் + தீம்கா.
kumar c - bangalore, இந்தியா
02-ஏப்-2024 04:46 Report Abuse
kumar c அதற்கு பதில் இது இல்லையே ? பருப்பு இருக்கானு கேட்டா உப்பு இருக்குனு சொல்லுறாரு .
Ramesh Sargam - Back in Bengaluru, India., இந்தியா
01-ஏப்-2024 22:26 Report Abuse
Ramesh Sargam அந்த கச்சத்தீவை காங்கிரஸ் கட்சிதான் இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது என்று நீங்கள் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? நீங்கள் அப்படி செய்ததால்தான் இன்று இந்த அளவுக்கு பிரச்சினை.
மேலும் 2 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்