தி.மு.க., ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி: பிரதமர் மோடி

"பெண்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்று நினைக்கும் அரசாக, நமது அரசு உள்ளது. உலகில் 3வது இடத்தை நோக்கி நமது பொருளாதாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி, 'நமோ' செயலி வாயிலாக உரையாடினார். முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அதில், " எங்களின் கடின உழைப்பாளிகளாக விளங்கும் தமிழக பா.ஜ., தொண்டர்கள் உடனான 'எனது பூத் வலிமையான பூத்' உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தமிழகத்தில் உள்ள நமது தொண்டர்கள் நமது கட்சியின் நல்லாட்சி குறித்து மாநிலம் முழுவதும் திறம்பட பரப்பப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும் பாராட்டுக்குரியது.

தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழகம் விரக்தியடைந்து, எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" எனப் பதிவிட்டிருந்தார்.

பின், 'நமோ' செயலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழகத்தில் நீங்கள் சிறப்பாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவரின் உழைப்பும் தான் நம் கட்சியை வலுவாக முன்னெடுத்துச் செல்லும். 'எனது பூத் வலிமையான பூத்' என்ற முழக்கத்துக்கு உங்களின் உழைப்பு தான் காரணம்.

நமது வேட்பாளர்களும் தயாராகிவிட்டனர். நமது வாக்குறுதிகளும் தயாராகி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் நேரத்தில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

சமீபத்தில் நான் தமிழகம் வந்திருந்தேன். அங்கு மக்கள் தந்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்ன பாக்கியம் செய்தேன் எனப் பெருமை கொண்டேன்.

பா.ஜ., அரசு பெண்களை மையப்படுத்தி பல திட்டங்களை செய்து வருகிறது. மீண்டும் பா.ஜ., அரசு அமையும் போது எந்த மாதிரியான திட்டங்களை நாம் செய்ய வேண்டும் என்பது பற்றி மக்களிடம் கேளுங்கள்.

அறுவடை செய்த தானியங்களை காக்க குடோன் அமைக்க வேண்டும் என நீங்கள் கேட்பது சரி தான். தானியங்களைப் பாதுகாக்க 2 லட்சம் குடோன்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

பெண்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்று நினைக்கும் அரசாக, நமது அரசு உள்ளது. உலகில் 3வது இடத்தை நோக்கி நமது பொருளாதாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

இவ்வாறு பிரதமர் பேசினார்.


Sampath Kumar - chennai, இந்தியா
30-மார்-2024 09:37 Report Abuse
Sampath Kumar ஆட்சியால் உலகமே விரக்தி அமெரிக்கா முதல் அணைத்து நாடுகளும் காரணம் இனி உங்ககளை ஆழ விட்டால் தேர்தலும் இருக்காது ஜனநாயகமும் இருக்காது என்று பல நடுகல் கருதுவதால் வேண்டாம்
30-மார்-2024 09:13 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி பத்து வருட ஆட்சி. ஆனால் இன்னும் வாரிசு அரசியல், திமுக கொள்ளை அடித்தது, இரயில் ஏறி வந்தார்கள் என சொல்லி ஓட்டு கேட்பது எவ்வளவு அவமானம். திமுக தவறான ஆட்சி எனில் நீங்கள் பிரதமராக இருந்து ஏன் ஆட்சி தொடர விட்டீர்கள்.
Indian - kailasapuram, இந்தியா
30-மார்-2024 08:40 Report Abuse
Indian தி மு கா ஆட்சியில் மக்கள் மிகவும் சந்தோசமாக தான் உள்ளனர் ....
GMM - KA, இந்தியா
30-மார்-2024 07:09 Report Abuse
GMM திமுக கட்சியின் மீதும் மக்கள் மட்டும் அல்ல, திமுக அனுதாபிகள் விரக்தியில் உள்ளனர்.திமுகவினால் தமிழர் கலாச்சாரம், தமிழகம் நிலை குலைந்து வருகிறது. மாற்றம் அவசியம் தேவை.
Palanisamy T - Kuala Lumpur, மலேஷியா
30-மார்-2024 03:13 Report Abuse
Palanisamy T உங்கள்மேல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குப் பிறகு தனிப் பட்ட மதிப்பும் மரியாதையுமுண்டு. மத்தியில் உங்கள் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அது தான் நாளைய இந்திய நாட்டிற்கு நல்லது. ஆனால் தமிழகத்தில் பாஜக வின் கொள்கை முரண்பாடுகளால் பாஜக வின் ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
Palanisamy T - Kuala Lumpur, மலேஷியா
30-மார்-2024 02:52 Report Abuse
Palanisamy T நீங்கள் சொல்வது உண்மைதான். இதை விட பெரியவுன்மை, தமிழகம் பாஜக காங்கிரஸ் போன்ற.தேசியக் கட்சிகளை யும் நம்புவத்ற்க்கில்லை.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்