பா.ஜ.,வை பழனிசாமி ஏன் விமர்சிப்பதில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில்

"கர்நாடக அரசு, நமக்கு வேண்டிய அளவுக்கு தண்ணீர் தர தயாராக இருக்கிறது. அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீர் வருவது தடைபடுகிறது" என, தமிழக காங்கிரசின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் ஒறு்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இண்டியா கூட்டணி அமைந்தது.

தமிழகத்துக்கு காவிரி நீர் வந்து கொண்டுருக்கிறது. கர்நாடக அரசும் நமக்கு வேண்டிய அளவுக்கு தண்ணீர் தருவதற்கு தயாராக இருக்கிறது. அவர்கள் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீர் வருவது தடைபடுகிறது. முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவுடன் பேசி தண்ணீர் பிரச்னைக்கு வழியை ஏற்படுத்துவார்.

பழனிசாமி பா.ஜ.,வை விமர்சித்து பேசினால் கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ., கையில் எடுத்துக் கொள்ளும். அதற்குப் பயந்து மோடியை அவர் விமர்சிப்பது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்