காங்கிரசால் பா.ஜ.,வை தடுக்க முடியாது: பி.ஆர்.எஸ். தலைவர்

"மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்களால் மட்டுமே பா.ஜ.,வை தடுத்து நிறுத்த முடியும்" என, பி.ஆர்.எஸ்., கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் பேசியதாவது:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரால் மட்டுமே பா.ஜ.,வை தடுக்க முடியும்.

பா.ஜ.,வை எதிர்கொள்வதற்கான ஆற்றலை காங்கிரஸ் இழந்துவிட்டது. நாடு முழுவதும் உள்ள களநிலவரத்தைப் பார்த்தால் மாநிலக் கட்சிகளின் தலைவர்களால் மட்டுமே பா.ஜ.,வை எதிர்கொள்ள முடியும்.

கடந்த சட்டசபை தேர்தலில் பி.ஆர்.எஸ்., கட்சியை பா.ஜ.,வின் பி டீம் எனக் கூறி இமேஜை கெடுக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டது. பொய்யான பிரசாரங்கள் மூலம் சிறுபான்மையின சமூகத்தினர் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்த முயன்றனர். ஆனாலும், அவர்களால் எங்களின் கோட்டையாக இருக்கும் ஐதராபாத்தில் வெற்றி பெற முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்