ரூ.200 தானா? புலம்பிய தொண்டர்கள்

அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை லோக்சபா தேர்தலுக்கான விருதுநகர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்ய வந்தார். கட்சியினர் பல லட்சங்களைக் கொட்டி ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர். இதைப் பார்த்த தி.மு.க., தொண்டர்கள் நம்மையும் பலமாக கவனிப்பர் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

கூட்டத்திற்கு ஒன்றியத்திலிருந்து 7,000 நபர்களை கூட்டி வர வேண்டும் என மாவட்ட கட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. நுாற்றுக்கணக்கான வாகனங்களில் மக்களை அழைத்து வந்தனர். தலைக்கு 200 ரூபாய் வழங்கப்பட்டது.

இதைப் பார்த்த தொண்டர்கள், 'ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு 200 ரூபாய் மட்டும் கொடுக்கிறீர்கள்; ஏற்பாடுகள் செய்ய லட்சங்களை கொட்டுகிறீர்கள்; தொண்டர்களுக்கு மட்டும் மிச்சத்தை தருகிறீர்கள்' என, 200 ரூபாயை வாங்கிக் கொண்டு புலம்பியபடி சென்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)