'சமுதாய ஓட்டுகளை கைப்பற்ற பா.ஜ., திட்டம்'

சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற வி.சி., கட்சி நிறுவனர் திருமாவளவன் பேசியதாவது:

பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம், பா.ஜ., குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பூஜ்யத்திற்கும் குறைவாக ஏதாவது இருந்தால், அதற்கு இணையாக பா.ஜ.,வை கூறலாம் என ஒருமுறை கூறியிருந்தார். ஆனால், இப்போது, அந்த பா.ஜ.,வுடன், தேர்தலுக்காக பா.ம.க., சேர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ., பூஜ்யம்தான்.

இந்நிலையில், பா.ஜ., தன் ஓட்டு வங்கியை அதிகரித்துக்கொள்ள, ராமதாஸ், பாரிவேந்தர், ஜி.கே.வாசன் ஆகியோருக்கு, 'சீட்' கொடுத்து, 'தாமரை' சின்னத்தில் போட்டியிட வைக்கிறது.

அதன் வாயிலாக, அவர்களின் சமுதாய ஓட்டுகளை பெற்று, பா.ஜ., ஓட்டு வங்கியை அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்