திருத்தணிக்கு முட்டி போட்டு ஏறிய தொண்டர்கள்

திருத்தணி தொகுதியில், 20 ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க., வேட்பாளர் எஸ்.சந்திரனும், அ.தி.மு.க., வேட்பாளர் கோ.அரியும், தொகுதி முழுதும் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என, பாலாபுரத்தை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் என, 20 பேர், திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு செல்லும், 365 படிகளில் முட்டி போட்டு ஏறிச் சென்றனர். மேலே சென்றபின், மாட வீதியில், ஒரு முறை முட்டி போட்டு வலம் வந்து, மூலவரை தரிசித்தனர். 'சந்திரனுக்கு அருள் பாலிக்க முருகனை வேண்டினோம்' என்றனர். முட்டி மோதி முருகன் புண்ணியத்தில் ஜெயித்தால் சரி.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)