தொலைநோக்கு சிந்தனை தேவை!

தமிழகத்தில் அனைத்து வளங்களும் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவற்றை பாதுகாத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு முயற்சிக்கும் கட்சிக்கே என் ஆதரவு.
வி.பி.ஜேக்கப், 58, வியாபாரி, கூடலுார், நீலகிரி.

புதிய திட்டம் அவசியம்



தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து, வாக்குறுதி அளித்து, அதன்பிறகு கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர் சில கட்சியினர். அப்படிப்பட்டவர்களை தவிர்த்து, மக்கள் நலனில், தொகுதி முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் வேட்பாளருக்கே என் ஓட்டு.
எஸ்.ராமகிருஷ்ணன், 62, சமூக ஆர்வலர், குன்னுார்.

கடன் சுமை அதிகரிக்கும்



மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கும் அரசு, பதவிக்காலம் முடியும் போது, கடன் சுமையில் சிக்கி விடும். இலவச பரிசுகளை தவிர்த்து, குடிநீர், கல்வி, மருத்துவம் போன்றவற்றை மட்டும், இலவசமாக கொடுக்க, உறுதி அளிக்கும் கட்சிக்கே, என் ஓட்டு.
ஜி.அப்துல் சலீம், 57 , பானு நகர், அம்பத்துார்.

கல்விமுறை மாற வேண்டும்



முதுநிலை பட்டப்படிப்பு படித்த மாணவ - மாணவியருக்கு, சரியான வேலைவாய்ப்பு இல்லை. இயந்திரத்தனமான கல்வி முறையை மாற்றி, வாழ்க்கையை வளப்படுத்தும், தொழில் வாய்ப்புகளை வழங்குகிற கல்விமுறையை கொண்டு வரும் கட்சிக்கே என் ஓட்டு.
ஆர்.ரக் ஷனா, 21, கல்லுாரி மாணவி, அவிநாசி.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)