கூட்டணி பேச்சு : குழு அமைத்த ஓ.பி.எஸ்.,

லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்கு குழு ஒன்றை அமைத்து அறிவித்துள்ளார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூட்டணி குறித்து பேச்சு நடத்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, தர்மர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ் அணி சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள், கட்சியின் சார்பில் வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். விருப்ப மனு வழங்குபவர்களுக்கு மாலையே நேர்காணல் நடத்தப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் உள்ளவர்கள், நேர்காணலில் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்