' டான் ' களை அடித்து ' டான்' ஆன பழனிசாமி

சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் எதிரே திருப்பத்துார் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

இதில் பாஸ்கரன் மகன் கருணாகரன் பேசியதாவது:

பழனிசாமின்னா என்னன்னு தெரியுமா... ஆட்சி, அதிகாரத்தில் இருந்த போது, 18 எம்.எல்.ஏ.,க்கள் தன் ஆட்சிக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று தெரிந்ததும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களை தகுதி நீக்கம் செய்தார்.

புரட்சித் தமிழர் என்றால் சாதாரணமான ஆள் என்று நினைத்தீர்களா? பழனிசாமி, 10 பேரை அடித்து 'டான்' ஆகவில்லை. அவர் அடித்த அத்தனை பேரும் 'டான்' தான். சசிகலாவை அடித்தார்; டி.டி.வி.தினகரனை அடித்தார். பின், பன்னீர்செல்வத்தை அடித்து நொறுக்கினார்.

அடுத்து, மோடிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்; அவரையும் காலி செய்வார். வரும் லோக்சபா தேர்தலில் தாமரை மலர்கிறதோ இல்லையோ, இரட்டை இலை வளர்ந்தே தீரும்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்