ஒரே மேடை காலையில் நீ... மாலையில் நான்...

விழுப்புரம் நகராட்சி திடலில், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக அமைக்கப்பட்ட மேடையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று, தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினர்.

இதே திடலில் அன்றைய தினம் மாலை, முதல்வர் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தை, தி.மு.க.,வினர் நடத்தினர். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் புதிதாக மேடை போடும் செலவு மிச்சம் என, தி.மு.க., நிர்வாகிகள் மார்தட்டிக் கொண்டனர். இதை கேட்ட மற்றொரு நிர்வாகி, 'என்ன இருந்தாலும் கூட்டத்தை கூட்டுவதற்கு பணம் செலவு செய்ய வேண்டி உள்ளதே...' என்று கமென்ட் அடித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)