'முதுகில் குத்திய வேலுார் அ.தி.மு.க.,'

''கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வினர் என் முதுகில் குத்தி தோற்கடித்து விட்டனர்,'' என, புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம் பேசினார்.
வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு சட்டசபை தொகுதி, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம், கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், அவர் பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், இத்தொகுதியில் எம்.பி.,யாக்குகிறேன் எனக்கூறி, அ.தி.மு.க.,வினர் என் முதுகில் குத்தி தோற்கடித்து விட்டனர். அ.தி.மு.க.,வினரே வேறு கட்சிக்கு ஓட்டு போட பொதுமக்களிடம் கூறினர்.
அவர்களும் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டனர்.எம்.ஜி.ஆர்., இருந்திருந்தால் அவர்களை சும்மா விட்டிருப்பாரா; ஜெயலலிதா இருந்திருந்தால் சுட்டிருப்பார். நான் ஜெயித்து மந்திரியாகக் கூடாது என்பதற்காகவே, அ.தி.மு.க.,வினர் ஓட்டு போடவில்லை.
அதனால் தான், நல்லதோ, கெட்டதோ, மோடியிடம் சென்று விட்டேன். ஜெயித்தால் மோடி எனக்கு மந்திரி பதவி கொடுப்பார்; இல்லாவிட்டாலும், வேறு ஏதாவது ஒரு பதவி கொடுப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து