காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் முடித்துள்ளேன்: பிரதமர் மோடி

"காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றையொன்று எதிர்ப்பது போல இருந்தாலும் இருவரின் சித்தாந்ததும் ஒன்று தான். தனது அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ், அசாமை தன் பிடியில் வைத்திருக்கப் பார்க்கிறது" என, பிரதமர் மோடி பேசினார்.

அசாமில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:

நாடு முழுதும் மோடியின் உத்தரவாதம் உள்ளது. இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதங்களை நான் தருகிறேன். மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு சாட்சியாக விளங்குகிறது.

காங்கிரஸ் கட்சி இங்குள்ள மக்களுக்கு பிரச்சனையை மட்டுமே தந்தது. பா.ஜ., அதை மென்மையாக மாற்றி அமைத்து. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாட்டில் உள்ள மக்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் தகுதியான திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்கிறது.

முத்தலாக் ஒழிப்பு சட்டத்தால் இஸ்லாமிய சகோதரிகள் பயன் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அசாம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

திரிபுராவில் சி.பி.எம்., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது ஊழல் தலைதுாக்கியது. இடதுசாரி கட்சிகள் இந்த மாநிலத்தை ஊழல் நிறைந்த குகை போல மாற்றின. வடக்கு - கிழக்கு பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்தக் கவனமும் செலுத்தவில்லை. இந்த மாநிலத்தை கொள்ளையடித்ததே அவர்களின் கொள்கை.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றையொன்று எதிர்ப்பது போல இருந்தாலும் இருவரின் சித்தாந்ததும் ஒன்று தான். தனது அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ், அசாமை தன் பிடியில் வைத்திருக்கப் பார்க்கிறது.

இவர்களுக்கு ஊழல் மற்றும் கொள்ளையடிப்பதற்கான வழிகள் எப்போதும் திறந்தே இருக்கிறது. காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் நான் செய்து முடித்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


spr - chennai, இந்தியா
19-ஏப்-2024 17:48 Report Abuse
spr "காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் நான் செய்து முடித்துள்ளேன்" இப்படிச் சொல்லாமல் "காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் நாங்கள் செய்து முடித்துள்ளோம்." என்று சொன்னால் பாராட்டலாம். மற்றபடி சிறப்பாகவே செய்திருக்கிறார் அரசு நிறுவனங்கள் எப்படி உற்பத்தித்திறன் இன்றி அழிந்தன என்பதற்கு பல மூடப்பட்ட ஆலைகள் நிறுவனங்களே சாட்சி. மக்களின் அன்றாடத் தேவைகளான ஆதாயம் எதிர்பார்க்க இயலாத மருத்துவம், கல்வி, பாதுகாப்பு, காவற்துறை, போதை மருந்து தடுத்தல், ஊழல் தடுப்பு மற்றும் வரி வசூல் செய்தல் இவை போன்றவையே அரசின் தொழிலாக இருக்க வேண்டும் இங்கும் ஆதாயம் எதிர்பார்க்க வேண்டாமே தவிர உற்பத்தித் திறன் மிக அவசியம் என்பது அவசியமே ஆனாலும் வாங்கிய கடன் எப்படி செலவாகிறது அதனால் உண்டான பயன் என்ன என்பதே முக்கியம் ஆனாலும் வாங்கும் கடனையும் வங்கிகள் (வசூலாகாது கணக்கில் இருந்து) நீக்கும் கடனையும் குறைக்க வேண்டும். வசூலாகாத கடனை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இதனை அடுத்த வாய்ப்பில் இவர் செய்வாரென எதிர்பார்ப்போம். வாங்கும் கடனையும் வங்கிகள் நீக்கும் கடனையும் குறைக்க வேண்டும்
Sampath Kumar - chennai, இந்தியா
19-ஏப்-2024 09:16 Report Abuse
Sampath Kumar ஆமாம் ஆமாம் சொல்லிக்க வேண்டியது தான்
Bahurudeen Ali Ahamed - aranthangi, இந்தியா
18-ஏப்-2024 15:27 Report Abuse
Bahurudeen Ali Ahamed ஆம் காங்கிரஸ் ஆட்சி அறுபது ஆண்டுகளில் உருவாக்கிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் (சிலது மட்டும் இருக்கிறது அதுவும் இப்ப ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்) பத்தே ஆண்டுகளில் தனியாருக்கு தாரை வார்த்தாகிவிட்டது, ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் கோடி கடனாளியாகிவிட்டது
சோழநாடன் - Tiruchirappalli, இந்தியா
17-ஏப்-2024 22:28 Report Abuse
சோழநாடன் காங்கிரஸ் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களைக் கடந்த 10ஆண்டுகளில் விற்று ,பலகோடி கடனை வாங்கி வைத்திருப்பது மோடி ஆட்சியின் மகத்தான சாதனை. இதை காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் செய்யமுடியாது. ஜெய்ஸ்ரீராம்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்