விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்: மீரட்டில் கொந்தளித்த மோடி

"ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இது சிலரை கவலையடைய வைத்துள்ளது. அவர்களிடம் மோடி பயப்படுவார் என நினைக்கிறார்கள். இந்தியா தான் எனது குடும்பம். எனக்கு யார் மீதும் பயம் இல்லை" என பிரதமர் மோடி பேசினார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

லோக்சபா தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பு இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றப் போகிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தோம். அதை 5வது இடத்துக்குக் கொண்டு வந்தோம். நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.

மூன்றாவது இடத்தை அடையும் போது, நாட்டில் வறுமை ஒழியும். அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி, மேலும் அதிகரிக்கும். பா.ஜ., ஆட்சியில் வளர்ச்சியின் டிரெய்லரை தான் பார்த்தீர்கள். நாட்டை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இது சிலரை கவலையடைய வைத்துள்ளது. அவர்களிடம் மோடி பயப்படுவார் என நினைக்கிறார்கள். இந்தியா தான் என் குடும்பம். எனக்கு யார் மீதும் பயம் இல்லை.

நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு அடியையும் எடுத்து வருகிறேன். அதனால் தான் ஊழல்வாதிகள் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளனர்.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஊழல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள், அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.

இன்று காங்கிரஸின் மற்றொரு தேசவிரோத நடவடிக்கை, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திய கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தில் கச்சத்தீவு என்றொரு தீவு உள்ளது. இந்தத் தீவு நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தீவு தேவையற்றது எனக் கூறி இலங்கைக்கு தாரைவார்த்தது.

காங்கிரசின் இந்த செயலுக்கு நாடே விலை கொடுத்து வருகிறது. இந்த தீவை நோக்கிச் செல்லும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்த தவறு குறித்து காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகளும் மௌனம் சாதிக்கின்றன. இப்படிப்பட்ட இண்டியா கூட்டணி, நாட்டின் நலனுக்கான முடிவுகளை எடுக்குமா?

இவ்வாறு மோடி பேசினார்.


Sampath Kumar - chennai, இந்தியா
03-ஏப்-2024 09:27 Report Abuse
Sampath Kumar பார்த்து ரத்தக்கொதிப்பு வரப்போகுது முதலில் ஆர்.டீ.இ அறிக்கையை கொடுத்தது யாரு? சொல்வீர்களா? சொன்னீர்கள் ஒருத்தர் பெயரை அதனை விசாரித்து பார்த்தால் அப்படி ஒரு ஆளே இல்லை என்பது தெளிவாக புரிந்து விட்டது இது முதல் அடி அப்புறம் ஏன் கட்ச தீவை கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை இது இரண்டாவது அடி மூன்றாவது இது உங்களிடம் என்ன தீர்வு என்றால் பதில் இல்லை இது மூன்றாவது அடி ஒரு பிரச்னை என்று வந்தால் அதற்கு தீரு சொல்ல வக்கற்ற வகை அற்ற அரசு தான் பிஜேபி ஆனா ஊன என்றால் காங்கிரெஸ்ஸை குறை கூறுவதே வாடிக்கையாக கொண்டு உள்ள ஒரு கட்சி பிஜேபி தான் போகாது ஊருக்கு வலி சொல்பவன் தான் பிஜேபி கும்பல் உங்க முக திரை கிழிந்து தொங்கு து அது இந்த தேர்தலில் தெய்ரயும் போவியா
Venkataraman - New Delhi, இந்தியா
01-ஏப்-2024 17:22 Report Abuse
Venkataraman இந்த கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அப்போதுதான் காங்கிரசும் திமுகவும் சேர்ந்து செய்த தேச துரோக சதி திட்டம் வெளிவரும். அதன் பிறகு கச்சத்தீவை மீண்டும் நம்நாட்டுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
Sathish - Coimbatore, இந்தியா
01-ஏப்-2024 16:09 Report Abuse
Sathish மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
01-ஏப்-2024 12:14 Report Abuse
ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி தேர்தல் மரத்தடியில் மோடிக்கு திடீர் ஞானம் பிறந்தது.
rameshkumar natarajan - kochi, இந்தியா
01-ஏப்-2024 10:34 Report Abuse
rameshkumar natarajan our hon. pm has ruled this nation for 10 years. now only he has come out of deep sleep. what you were doing all these 10 years, why now only you are talking. elections, elections, elections. i think, dmk has given sleepless nights to him.
vbs manian - hyderabad, இந்தியா
01-ஏப்-2024 08:43 Report Abuse
vbs manian இந்த கட்ச தீவை வைத்து கொண்டு எதனை நாடகம் கழகம் போட்டது. இப்போது முகத்திரை கிழிந்து தொங்குகிறது.
Dharmavaan - Chennai, இந்தியா
01-ஏப்-2024 08:07 Report Abuse
Dharmavaan காங்கிரஸும் திருட்டு முட்டாள் கட்சியும் தேசத்துரோகிகள் தேச விரோதிகள் என்பது நிரூபணம்
swamy - chennai, இந்தியா
01-ஏப்-2024 07:10 Report Abuse
swamy சபாஷ்....வாருங்கள் மோடி அய்யா...
ramani - dharmaapuri, இந்தியா
01-ஏப்-2024 06:49 Report Abuse
ramani அன்றையிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கச்சதீவை தாரை வார்த்து காங்கிரஸ் மற்றும் திமுகவின் சதி செயலென்று. இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
01-ஏப்-2024 06:03 Report Abuse
Kasimani Baskaran தீம்கா எப்பொழுதும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாடகம் போடுவார்கள். இந்த முறை ஒரு மாற்றமாக தீம்காவின் லீலைகளை வெளியுலகுக்கு தெரியுமளவுக்கு பாஜக பிரபலப்படுத்திவிட்டது. சென்ற முறை ஜல்லைக்கட்டை தடை செய்வதில் முனைப்புக்காட்டியது காங்கிரஸ் மட்டுமே - தீம்காவுக்கு தெரியாது என்பது போல உருட்டி தப்பித்துக்கொண்டார்கள். இந்த முறை தீம்காவை பாஜக வைத்துச்செய்வது தெளிவாகிறது...
மேலும் 2 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்