மோடியின் பேச்சால் இலங்கையில் பதற்றம்: செல்வப்பெருந்தகை தகவல்

"சீனாவோடு 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2000 சதுர கி.மீ. நிலத்தை மீட்பதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை" என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றிலும் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கச்சத்தீவு குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியுள்ளனர்.

கச்சத்தீவு குறித்து சமீபகால பேச்சுகளால் இலங்கையில் 75 சதவீத சிங்களர்கள் வாழும் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் என 35 லட்சம் தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டு கால துயரை போக்க அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை அரசோடு ஒப்பந்தம் போட்டு அதற்காக தமது உயிரை துறந்து, இன்றைக்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருப்பது அவர் போட்ட ஒப்பந்தத்தினால் இலங்கை பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட 13-வது திருத்தம் தான்.

தமிழர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கச்சத்தீவு பிரச்னை குறித்து மோடியும், நிர்மலா சீதாராமனும் பேசியது இலங்கைத் தமிழர்களிடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

இது குறித்து அங்கே வெளிவரும் ஆங்கில பத்திரிகைகள் தலையங்கம் எழுதியுள்ளன. பிரதமரின் பேச்சுகளால் இலங்கையுடனான நமது உறவுகள் பாதிக்கப்படுமேயானால் ஏற்கனவே சீனாவின் வலையில் சிக்கியிருக்கிற அந்நாடு, நமது புவிசார் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடும் என்பதை மறந்து பிரதமர் மோடி பேசுவதை அந்நாளேடுகள் கவலையோடு எச்சரித்துள்ளன.

மாநிலத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை தாரை வார்க்கிற பிரதமர் மோடியை எவருமே மன்னிக்க மாட்டார்கள். சீனாவோடு 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2000 சதுர கி.மீ. நிலத்தை மீட்பதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடி, கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். இதன்மூலம் அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்படத் தயங்க மாட்டார் என்பது இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.

நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியைப் பற்றி கவலைப்படுகிறார். நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், வங்கிகளில் ரூபாய் 53,000 கோடி கடன் வாங்கிய நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். அவர்களை 10 ஆண்டுகளில் மீட்டெடுக்க நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்தது?

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாரி வழங்கியவர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்ரேட்டுகள் சொத்துகளை குவிப்பதற்கு துணை போனவர். கார்ப்ரேட்டுகள் வாங்கிய கடனில் 2014 முதல் 2023 வரை வாராக் கடன் ரூபாய் 66 லட்சத்து 50 ஆயிரம் கோடி.

இதில் தள்ளுபடி செய்யப்பட்டது ரூபாய் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி. இதில் பெரும் தொழிலதிபர்கள் வாங்கிய கடன் ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்மலா சீதாராமன் தனது நிதியமைச்சகத்தை தொழிலதிபர்களுக்காக பயன்படுத்தினார் என்பதை ஆதாரத்தோடு தெரிந்து கொள்ளலாம்.

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை ஆகியோரின் ஆதாரமற்ற அவதூறான பிரசாரத்தைக் கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். கடந்த லோக்சபா தேர்தலைவிட வரும் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Gopal - chennai, இந்தியா
04-ஏப்-2024 08:59 Report Abuse
Gopal நீங்கள் என்ன சொல்லவர்றிங்க katcha தீவ மீட்க கூடாதுன்னா.
S Ramkumar - Tiruvarur, இந்தியா
04-ஏப்-2024 08:48 Report Abuse
S Ramkumar நான் பத்தாவது பெயில். நா எட்டாவது பாஸ். கடன் கொடுத்தது யாரு. ஹா ஹா ஹா நீங்க கடன் வசூல் பண்ணல.
sankaranarayanan - Chennai-Tamilnadu, இந்தியா
04-ஏப்-2024 07:58 Report Abuse
sankaranarayanan நாட்டை விட்டு ஓடவிட்டதே ஓடிப்போனதே கான்கிராசு தானய்யா முழுப்பூசணிக்காயையே மறைக்கமுடியுணமா காங்கிரசு ஆட்சியில் நடந்த சம்பவங்களை எல்லாம் மற்றவர்கள் ஆட்சி என்று விவரம் தெரியாமல் பேசுபவர்கள் எல்லாம் ஒரு மாநில கட்சி தலைவராம் என்ன செய்வது காலத்தின் கட்டாயம்
Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
04-ஏப்-2024 05:51 Report Abuse
Kasimani Baskaran இலங்கைத்தமிழர்களை கொலை செய்த பொழுது வராத சிக்கலா இனி வந்து விடப்போகிறது. தீம்காவும், காங்கிரசும் தமிழனுக்கு என்றுமே விசுவாசமாக இருந்தது இல்லை - ஏனென்றால் அவை இரண்டும் தமிழக கட்சிகள் கிடையாது.
Anantharaman Srinivasan - chennai, இந்தியா
03-ஏப்-2024 23:03 Report Abuse
Anantharaman Srinivasan மாத்தி மாத்தி இதே வேலையா போச்சு
Rajah - Colombo, இலங்கை
03-ஏப்-2024 18:27 Report Abuse
Rajah பொய் சொல்வதற்கு அளவே இல்லையா? இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணமே காங்கிரஸ் கட்சி என்பதுதான் உண்மை. 13-வது சட்ட திருத்தம் குப்பைத் தொட்டியில் போட்டு பல வருடங்கள் ஆகின்றன. இங்குள்ள சிங்களவர் மட்டுமல்ல தமிழர்களும் கச்ச தீவை திருப்பிக் கொடுப்பதற்கு விரும்பவில்லை. இலங்கைத்தமிழர் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை.
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai, இந்தியா
03-ஏப்-2024 16:27 Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN ஓடி போன ஆட்களுக்கு கடன் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சியில் தானே ?? இது மாதிரி தேசத்திற்கு எதிரான காரியங்கள் நடுக்கும் என்று அறிந்து கொண்டு தான், காந்தி சுதந்திரம் பெற்ற உடனே கட்சியை கலைக்க வேண்டும் என்று சொன்னாரோ ?? இருந்தாலும் இருக்கும்.
Mohan - Salem, இந்தியா
03-ஏப்-2024 16:01 Report Abuse
Mohan ஐயோ பாவம் செல்வப் பெருந்தகை. ஆதாரமற்ற பொருளாதார குற்றச்சாட்டுகளை அப்படியே ""ரிபீட்டு"" ஒருவேளை உங்களைப் பார்த்து பயம் வரலாம்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்