வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை
சென்னை: ''தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு, 17 ம் தேதிக்குள் முறைப்படி வெளியிடப்படும்'' என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு பெறும் பணி துவங்கியது. கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகத்தை துவக்கி வைத்து, பிரேமலதா கூறியதாவது:
தே.மு.தி.க., சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், 12ம் தேதி வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. தே.மு.தி.க., கூட்டணியை அறிவிப்பதில், எந்த காலதாமதமும் இல்லை. தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியை பெறும். யூகமான கேள்விகளுக்கு, நான் பதில் அளிப்பது கிடையாது.
வரும் 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. அதற்குள் தே.மு.தி.க., கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவோம். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
இதென்ன பெரிய சிதம்பர ரகசியம்? யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் தேமுதிக என்ற சொப்பணசுந்தரி சொந்தம். எடப்பாடி நூறு கோடி கொடுத்து, ஸ்டாலின் நூறுகோடியே ஒரு ரூபாய் கொடுத்தால், ஸ்டாலினுக்குத்தான் தேமுதிக. எல்லோருக்கும் வெற்றி தேர்தல் ரிசல்ட் வந்தபின்னர் தான். தேர்தலுக்கு முன்னரே ஜெயிப்பதில் பிரேமலதா கில்லாடி.
வியாபாரத்தில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தால் வியாபாரம் உடனே முடியாது .காலம் தாழ்த்தித்தான் பார்க்கவேண்டும் .இப்போது இல்லையென்றாலும் அடுத்த தேர்தல் 2031 இல் முடிந்துவிடும் .பொறுத்திருந்து பாருங்கள் .
இந்த அம்மா கோயாம்பேடு மார்க்கெட்டில் கறிகாய் விற்பது போன்றே தேர்தலில் நிற்பவர்களை தேடிக்கொண்டு இருக்கிறாங்க பாவம் கறிகாயும் கிடைக்கவில்லை தேர்தலில் நிற்க ஆளும் கிடைக்கவில்லை
பீடி சிகரெட் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிட தடை செய்வதர்க்கு முன் ஊடகங்களில் ஒரு விளம்பரம் வரும் அதில்இந்த பீடியை இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை என்று வரும் அதுபோல இறுதிவரா இழுத்துவிட்டு ஒண்ணுமில்லாமல் போகப்போகுது. இவர்கள் தேறமாட்டார்கள்
விஜய்காந்தையும் அவருடைய குடும்ப கட்சியையும் சிஸ்டமேடிக்காக நாசம் செய்தது இந்த புண்யவதிதான். ஒரு கொள்கையோ தொண்டர்களோ இல்லா அந்த கட்சியை மதில் மேல் பூனை கட்சியாக மாற்றயதில் இவருடைய பங்கு வெகு அபாரம்.
திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் இந்த கேப்டளை விளையாட்டுக்கு சேர்த்துக்கொள்ளாமல் உதறிவிட்டால் அடுத்த பஞ்சாயத்து தேர்தலில் இவர் கூடாரம் காலியாகிவிடும். வர வர இவர் தொல்லை தாங்க முடியவில்லை.


இப்படியே பேனல் தேர்தலே முடிந்துவிடும் போல் உள்ளது.