மோடியின் குடும்பம் ஈ.டி - ஐ.டி - சி.பி.ஐ தான்: ஸ்டாலின் விமர்சனம்

"10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எல்லாம் கீழ்நிலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்" என, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பா.ஜ.,வின் 'வாஷிங் மெஷின்' பாணியை ஆதாரபூர்வமாக ஆங்கில நாளேடு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பா.ஜ.,வுக்கு தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிநிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?

ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக ஆக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் என்கிறார் பிரதமர் மோடி. மோடியின் குடும்பம் என்பது ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ தான்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Devan - Chennai, இந்தியா
04-ஏப்-2024 04:42 Report Abuse
Devan பரவாயில்லை. உங்கள குடும்பத்தை போல ஊருக்கு ஒரு வாரிசு வைத்துக் கொள்ளவில்லை.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்