மோடியால் துரைமுருகன் கொந்தளிப்பு

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக அல்ல; ஜனநாயகம், அரசியல் சட்டத்தை காக்க நடக்கும் தேர்தல். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.,வை சுக்கு நுாறாக உடைப்பேன் என, கூறுகிறார்.

ஒரு தலைவர் இப்படியா பேசுவது; எங்களை அழிக்கவா, நீங்கள் வெற்றி பெற்று வர வேண்டும். தி.மு.க., என்ன மூட்டை பூச்சியா, நசுக்கி விட.

தி.மு.க.,வை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த, ராஜ கோபாலாச்சாரியரை மூட்டை பூச்சி போல் அழித்தோம். தி.மு.க.,வை அழிப்போம் என மோடி கூறுவதை கேட்கும்போது, நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் கொதிக்கிறது. உடல், பொருள், ஆவி அனைத்தும் கட்சிக்காக அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் வேலு பேசியதாவது:

நடக்கும் லோக்சபா தேர்தல், சமூக நீதிக்கும் - மனு நீதிக்கும், ஜனநாயகத்திற்கும் - பாசிசத்திற்கும் இடையே நடக்கும் போர். பாசிச ஆட்சி வந்தால், அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், நாம் வாழ முடியாது.

விலைவாசி விஷம் போல் ஏறுகிறது, ஜி.எஸ்.டி., வாயிலாக மத்திய அரசு அச்சுற்றுத்தி கொண்டிருக்கின்றது. சி.ஏ.ஏ., சட்டத்தை நிறைவேற்ற காரணம் பழனிசாமி வகையறா தான். அவர்கள், தற்போது எந்த மதத்தை வைத்து ஓட்டு கேட்பர். இன்னொருவர் ஏ.சி.சண்முகம். ஏற்கனவே, வேலுார் எம்.பி.,யாக இருந்த அவர், அப்போது ஒன்றும் செய்யவில்லை. அல்வா கொடுப்பதில் கெட்டிக்காரர்.

இவ்வாறு, அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)