அம்பானி குடும்ப திருமணம் தான் முக்கியமா: ஊடகங்களை சாடிய ராகுல்

"ஊடகங்களின் பணி என்பது பொதுமக்களின் குரலை உயர்த்துவது தான். ஆனால், ஒரு போதும் பொதுப் பிரச்னைகளைப் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

என்னுடைய பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்களிடம் நான் கேட்ட ஒரே பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் தான். வேலையில்லா திண்டாட்டமும் பணவீக்கமும் நாட்டின் மிகப் பெரிய பிரச்னைகளாக உள்ளன.

ஆனால், ஊடகங்களைப் பார்த்தால் அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணத்தைத் தான் மிகப் பெரிய செய்தியாக வெளியிடுவார்கள். மோடியின் முகம் மட்டும் 24 மணிநேரமும் ஊடகங்களில் தெரியும். அவர்கள் சில சமயம் கடலுக்கு அடியில் செல்வார்கள். சில நேரங்களில் விமானத்தில் பறந்து செல்வார்கள்.

நானும் இதே கேள்வியை சில ஆண்டுகாலம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஊடகங்களின் பணி என்பது பொதுமக்களின் குரலை உயர்த்துவது தான். ஆனால், ஒரு போதும் பொதுப் பிரச்னைகளைப் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை. அதை அவர்களின் உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

நாட்டின் ஊடகங்கள் 15 முதல் 20 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் பணம், வெறும் 22 பெரும் கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.

தங்களின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என விவசாயிகள் போராடுகிறார்கள். தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என இளைஞர்கள் கேட்கிறார்கள். குடும்பத் தலைவிகளோ, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், நாட்டின் விவசாயிகளை பயங்கரவாதிகள் என பிரதமர் மோடி கூறுகிறார். இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக நமது விவசாயிகள் வரியைக் கட்டுகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புத் தருவதாக மோடி கூறியிருந்தார். அவர் கூறியபடியே வேலைவாய்ப்பை தரவில்லை. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு ஓராண்டு தொழிற்பயிற்சியும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயையும் கொடுப்போம். அவர்கள் சிறப்பாக பணியாற்றினால் வேலை உறுதி செய்யப்படும்.

அரசில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவோம். இவை கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியை கொடுக்கும். அரசில் ஒப்பந்த முறையை முடிவுக்கு கொண்டு வருவோம்.

அரசாங்கத்தில் யார் வேலை செய்தாலும் அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


C.SRIRAM - CHENNAI, இந்தியா
12-ஏப்-2024 10:40 Report Abuse
C.SRIRAM எப்படியோ உன்னுடைய உளறல் உண்மையிலே உளறல் தான் என்று புரிந்ததால் தான் இம்மாதிரி நடந்தது
Bhaskar Srinivasan - Trichy, இந்தியா
12-ஏப்-2024 10:39 Report Abuse
Bhaskar Srinivasan ஒரு படத்துலே ஹீரோவைதான் அதிகம் காட்டுவார்கள் காமெடி நடிகர்களுக்கு சில சீன் மட்டுமே கிடைக்கும், இந்தியா வரலாற்றின் ஹீரோ மோடி காமெடி நடிகர் ராகுல் அதற்க்கு தகுந்தாற்போல் ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது .
Bala - chennai, இந்தியா
12-ஏப்-2024 05:06 Report Abuse
Bala சரியாக சொன்னீர்கள் ராகுல் அவர்களே. இங்கே தமிழகத்தில் பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் ஆளும் திமுக அரசின் அடிமைகளாக செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சில மக்கள் பிரச்சனையை காண்பித்தாலும் அதற்கும் ஆளுங்கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் தொலைக்காட்சிகளில் காண்பிக்கிறார்கள். கஞ்சா கடத்தலில் பிடிபட்டவன் திமுகவின் அயலக அணி முன்னாள் பொறுப்பாளர் என்பதைக்கூட திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யும் கேவலமான வேலையில் ஈடுபடுகின்றன. மக்கள் இத்தகைய நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்களின் பித்தலாட்டங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏற்கனவே அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது இத்தகைய நடுநிலை ஊடகங்கள் எப்படி திமுகவிற்கு ஆதரவாக ருத்ர தாண்டவம் ஆடினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இன்று வாய்மூடி மௌனியாக ஆளுங்கட்சியின் துதிபாடி வருகிறார்கள். காரணம் ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் வெகு விரைவில் தமிழக மக்கள் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்
தாமரை மலர்கிறது - தஞ்சை, இந்தியா
12-ஏப்-2024 00:52 Report Abuse
தாமரை மலர்கிறது அம்பானி குடும்ப திருமணத்தை காண உலகப்பெரும் பணக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். சீரும் சிறப்புமாக நடந்தது. இந்தியாவின் பெருமையை அம்பானி நிலைநாட்டினார். ஒவ்வொரு இந்தியரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு வீராப்பாக பெருமை பேசினார்கள். உனக்கு பொறாமையாக இருந்தால், அதற்கு ஒண்னும்பண்ண முடியாது.
வாய்மையே வெல்லும் - மனாமா, பஹ்ரைன்
11-ஏப்-2024 22:36 Report Abuse
வாய்மையே வெல்லும் வெட்டியாக மைக் கிடைத்தால் நானும் சகட்டுமேனிக்கு வார்த்தைகளை அள்ளிவீசுவேன் ... ராவுளுக்கு எப்பப்பாரு அதானி அம்பானி பிதற்றல் அதை தவிர அரசியலில் பேச ஒன்றும் இல்லை இதை கேட்டு காது புளித்துவிட்டது
Jay - Bhavani, இந்தியா
11-ஏப்-2024 17:22 Report Abuse
Jay பத்திரிக்கைகள் காங்கிரசை புறக்கணித்ததாக தெரியவில்லை. தற்போதும் ராகுல் காந்தி அவர்கள் செய்யும் சேட்டைகளை செய்திகளாக போட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். காங்கிரசின் தலைமை குடும்பம் விலகி காங்கிரசிற்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். எதிர்க்கட்சியை இல்லாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல ஆனால் காங்கிரஸ் இப்பொழுது இருக்கும் நிலைமையில் எதிர்க்கட்சியாகும் தகுதி இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்