தேர்தலுக்காக தமிழை நேசிக்கும் மோடி: தமிழச்சி தங்கப்பாண்டியன்

"தேர்தலுக்காக மட்டுமே தமிழை அதிகமாக நேசிக்கிறார் பிரதமர் மோடி. இவை அனைத்தும் தேர்தலுக்கான யுக்திகள் தான்" என, தென்சென்னை தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது:

தென் சென்னைக்கு அளித்த முக்கிய வாக்குறுதியான பெருங்குடி குப்பைக் கிடக்கை அகற்றும் பணி 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. பள்ளிக்கரனை சதுப்பு நிலத்திற்கு 'ராம்சர்' அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

வேளச்சேரி ஏரியை சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கான வரையரை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வருட ஆட்சியில் சொன்னதை செய்துள்ளோம். ஆனால், பல பொய்களை பா.ஜ., சொல்கிறது. தொகுதிக்காக யார் குரல் தந்துள்ளனர் என்பது மக்களுக்குத் தெரியும்.

வெள்ள காலங்களில் 3 நாட்களுக்குள் மழைநீர் வடிந்ததற்கு காரணம், மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே. சென்னையின் பிரதான பகுதிகளில் தண்ணீர் வடிந்ததற்கு முதல்வர் எடுத்த முயற்சிகளே காரணம். வெள்ள நேரத்தில் வராத பிரதமர் மோடி, தற்போது அடிக்கடி தமிழகம் வருகிறார். தேர்தலுக்காக மட்டுமே தமிழை அதிகமாக நேசிக்கிறார். இவை அனைத்தும் தேர்தலுக்கான யுக்திகள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)