சுட்டெரிக்கும் வெயில் பிரசார கூலி உயர்வு

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. பொதுவாக அரசியல் கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் பெண்கள், தண்ணீர் பாட்டில், சாப்பாட்டுடன், 300 ரூபாய் கூலி பேசி பங்கேற்பர்.

தற்போது பிரசாரத்துக்கு வரும் வேட்பாளருடன் செல்ல, காலை, மாலையில் மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ள, அந்தந்த கட்சி நிர்வாகிகள், பெண்களை கூலிக்கு அமர்த்தி வருகின்றனர்.

அந்த பெண்கள், வெயிலை காரணம் காட்டி காலை, மாலை பிரசாரத்தில், சாப்பாடு, தண்ணீருடன், 500 ரூபாய் கூலி தர வேண்டும் என கெடுபிடி செய்து வாங்கிக் கொள்கின்றனர்.

மேலும் தலைவர்கள் வருகையின்போது பூரண கும்ப மரியாதை வழங்க குடம், சேலையுடன், 500 ரூபாய் தர வேண்டும் என்றும் ரேட் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். திடீரென ஏற்பட்டுள்ள இந்த கூலி உயர்வு, கூலிக்கு ஆட்களை அமர்த்தும் நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்