வேலைக்கு சென்றால் ரூ.400 பிரசாரத்திற்கு ரூ.100 தானா?

விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்காக கட்சியினர் அப்பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு, 100 ரூபாய் கொடுப்பதற்காக டோக்கனும் வழங்கினர்.

பிரசாரம் முடிந்ததும், டோக்கனைப் பார்த்து கடுப்பான தொழிலாளர்கள், 'பிரசாரத்திற்கு வர வேண்டும் என கட்சியினர் அழைத்து வந்தனர். அதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வெயிலில் மூன்று மணிநேரம் காத்திருந்தோம். ஆனால், 100 ரூபாய் தான் கொடுத்தனர். வேலைக்குச் சென்றிருந்தால் கூட, 400 ரூபாய் கிடைத்திருக்கும்' என புலம்பியபடி சென்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)