திமுக கூட்டணி இருந்தால்தான் சட்டசபைக்குள் காங்., வர முடியும்: ரகுபதி
புதுக்கோட்டை: '' திமுக உடன் இணைந்தால் தான் காங்கிரசுக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் எனவும், சட்டசபைக்குள் வர முடியும்,'' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: நாங்கள் சுமூகமாக தான் பேசுவோம். எங்கள் தலைவர் சரியான பாதையில் தான் கூட்டணியை அழைத்து செல்வார்.
தவெக உடன் திரைமறைவில் பேச்சு நடக்கிறது, அது, இது என சொல்வது எல்லாமே அவர்வர்கள் கப்சாவாக கிளப்பி விடும் விஷயம் தான். வேறு ஒன்றும் கிடையாது.நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி. இங்கு வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். இதனால் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள்.
தமிழகத்தில் திமுக உடன் கூட்டணி வைத்தால் தான் சட்டசபைக்குள் வர முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
விஜயிடம் யாரும் வரவில்லை. இதனால் காங்கிரசின் மதிப்பை புரிந்து இருக்கலாம். அவ்வளவு தான். ஆள் இல்லாத வீட்டில் என்ன வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆள் இல்லாத வீடு அது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
இன்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிசம் செய்த திமுக கவுன்சிலர் கைது .... ஆட்டோ பஸ் ட்ரெயின்லாம் இல்ல லே ... ப்ளைட்டு... நாம அப்டேட் ஆகிட்டம் லே ...
பலம் 2026 தேர்தலில் சட்ட அமைச்சர் ரகுபதி தோல்வி அடைந்து சட்டமன்றத்துக்குள் செல்ல மாட்டார்கள் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்றால் திமுகவுக்கு சுமார் 2000 வாக்குகள் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 50 தொகுதியில் கையை விட்டுப் போகும் அதேபோல் காங்கிரஸ் திமுக கூட்டணி இல்லை என்றால் சீட்டுகள் கிடைப்பது அரிது. தாவேக்கா கூட்டணியில் இணைந்தால் கண்டிப்பாக ஓட்டு சதவீதம் கூடும். மேலும் காங்கிரஸ் வளர்ச்சியை காணும் திமுக கூட்டணியில் தொடர்ந்தால் கடைசி வரை கொத்தடிமைகளா தான் இருக்க முடியும்.
பாஸ் அவங்க கூட்டணி இல்லைனா நமக்கு 70 தொகுதி தாண்டாது
சட்டத்துறை அமைச்சருக்கே சட்டம் தெரியவில்லை என்று நீதிமன்றம் செப்படி அடித்துள்ளதே. அதை மறந்து இந்த ஓடுகாலி வீரம் பேசுகிறது
இதை விட காங்கிரசுக்கு கேவலம் வேறு ஒன்றும் இல்லை. காங்கிரசை அறிவாலயத்தின் டாய்லெட் கிளீனர் என்று சொல்லிட்டாங்க.
நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே.முடிந்தால் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று பாருங்களேன்.ஓட ஓட விரட்டி விடுவார்கள்.

நீ அந்த நீதிமன்றம் சொன்ன அடிப்படை அறிவில்லாதவன் தானே.. நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்...அப்படியே கான்கிரஸ் கூட்டணி இருந்தா தான் திமுகவும் சட்டசபைக்கு வர முடியும் என்பது பழைய வரலாரு ..