தி.மு.க., கூட்டணி வேண்டாம்: ம.தி.மு.க., நிர்வாகி வலியுறுத்தல்
சென்னை : 'தொகுதிகளை குறைத்து கொடுத்தால், தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என, ம.தி.மு.க., சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சமூக வலைதளம் வழியே வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் அரியலுார், மதுரை தெற்கு, வாசுதேவநல்லுார், சாத்துார் ஆகிய தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' ம.தி.மு.க., தரப்பில், தி.மு.க., கூட்டணியில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., தரப்பில், ராஜ்யசபா 'சீட்' கிடையாது; சட்டசபை தொகுதிகள் நான்கு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்நிலையில், ம.தி.மு.க., சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: புதிதாக தி.மு.க., கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க., - ம.நீ.ம., போன்ற கட்சிகளுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை கொடுத்தனர். ம.தி.மு.க.,விற்கு கைவிரித்து விட்டனர்.
கடந்த முறை போட்டியிட்ட, ஆறு சட்டசபைத் தொகுதிகளிலிருந்து குறைத்து, மூன்று அல்லது நான்கு தொகுதி என்கிற அளவில் சுருக்கி, ம.தி.மு.க., என்ற கட்சியை அழிக்கும் வேலையை தி.மு.க., செய்கிறது. வைகோ தி.மு.க.,வோடு கூட்டணி வைத்ததன் காரணமாகத்தான், தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க., தப்பியது.
அதை தி.மு.க., மறந்து விட்டது. ம.தி.மு.க., என்ற கட்சி செயல்படுவதை, தி.மு.க., விரும்பவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., வெளியேற வேண்டும் என்பதே, உண்மையான ம.தி.மு.க., தொண்டர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
பிச்சை எடுப்பவர்கள், இவ்வளவு பிச்சை போடுங்கள் என்று கேட்க முடியுமா? அப்படி கேட்டால், பிச்சை இட வந்தவர்கள், பிச்சை இடாமலேயே போக வாய்ப்புள்ளது.
வைகோவிற்கும் அவரது மகனிற்கும் ராஜ்யசபா சீட் கிடைத்தால் போதும். மற்ற கட்சிக்காரர்களை அவர் அழகாகக் கழற்றி விடுவார்.

Beggars cannot be choosers . போட்டதை வாங்கிக்கொள்ளும் நிலையில் தான் மதிமுக இருக்கிறது .