ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் சுதீஷ்?
சென்னை: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க., சமீபத்தில், தி.மு.க., கூட்டணியில் இணைந்தது. கூட்டணியில் இணையும் முன்பாக, ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டை, தே.மு.தி.க., கேட்டு இருந்தது. அதற்கு தி.மு.க.,வும் ஒப்புக் கொண்டிருந்தது. நேற்று இரவு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்துக்கு, தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் வந்தார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கான ஒப்பந்தத்தில், சுதீஷ் கையெழுத்திட்டார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வழங்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவுக்கும் நன்றி. தே.மு.தி.க., வேட்பாளரை, பிரேமலதா இன்று அறிவிப்பார். சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை குறித்து, இன்னும் ஒரு வாரத்தில் பேசப்படும். தொகுதி பங்கீடு சுமுகமாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க., சார்பில், சுதீஷ், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்