/ செய்திகள் / பிப்.,14ல் காரைக்கால் வருகிறார் அமித் ஷா; கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ., தீவிரம்

பிப்.,14ல் காரைக்கால் வருகிறார் அமித் ஷா; கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ., தீவிரம்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14ம் தேதி காரைக்கால் வருவதால், அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., - புதிய நீதி கட்சி - இந்திய ஜனநாயக கட்சி - ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிக தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி போன்றவற்றை கேட்பதால், தே.மு.தி.க.,வுடன் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடனும் தே.மு.தி.க., பேசி வருகிறது. ஜான் பாண்டியன் இருப்பதால், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகிறார். இதனால், கடந்த ஜன., 23ல் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. இந்நிலையில் வரும் 14ம் தேதி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நடக்கும் பா.ஜ., பொதுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். அதற்குள் கூட்டணியை முடிக்க, பா.ஜ., தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தி உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பணிகளில் இருப்பதால், கூட்டணி பேச்சு தாமதமாகி வருகிறது. இன்னும் சில நாட்களில், தமிழக தேர்தல் பணிகளில் பியுஷ் கோயல் ஈடுபட உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர். வரும் 14ம் தேதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்பட்டால், திருச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்துவார் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thravisham
பிப் 08, 2026 09:23

பாஜக இளைஞர்களும் அண்ணாமலை பக்கம். No importance to Annamalai No vote


அன்பே சிவம்
பிப் 08, 2026 09:13

குறிப்பாக அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பிஜேபி மற்றும் அஇஅதிமுக தொண்டர்கள் யாரும் இவர்களை விருபும்வது இல்லை. மோடி மற்றும் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் இருக்க வேண்டும். 4). அமித் ஷா இந்தியாவின் உள்ள நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு உறிய வேலை செய்தால் போதமானது. குறிப்பாக மேற்கு வங்கம் மாநிலத்தில் அன்னிய தேச மக்களின் ஊடுருவலை தவிர்க்க வேண்டும்... அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை எந்த தமிழ் மக்களும் விரும்பும்வது இல்லை என்பது நிதர்சனமான உண்மை


R.Subramanian
பிப் 08, 2026 15:52

அது உங்களின் சொந்த கருத்து. நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழர்களின் பெருமை


அப்பாவி
பிப் 08, 2026 07:40

சனி புடிச்சு ஆட்டுதோ, திருநள்ளாறு தரிசனம். மக்கள் அடிச்சு முடக்கம்.