டூவீலரில் கமலை பின்தொடர்ந்த மேயர்

திருப்பூரில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, ம.நீ.ம., தலைவர் கமல் பிரசாரம் செய்ய வந்தார். பிரசார வேனில் அமைச்சர் சாமிநாதன்,எம்.எல்.ஏ., செல்வராஜ்கமலுடன் நின்றிருந்தனர்.

பாண்டியன் நகர் பிரசாரம் முடிந்து பல்லடம் நோக்கி பிரசார வேன் புறப்பட்டது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கார் கூட்ட நெரிசலில் சிக்கியது. அமைச்சர்,எம்.எல்.ஏ., அவரவர் காரில் ஏறி, கமலின் பிரசார வாகனத்தை பின் தொடர, மேயரால் அங்கிருந்து காரை எடுத்துவர முடியவில்லை.

இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர் டூவீலரில் வந்து, 'அண்ணா ஏறிக்கங்ணா...' எனக் கூற, ஏறி அமர்ந்து கொண்டார். பாண்டியன் நகரில் துவங்கி, பூலுவப்பட்டி, புதிய பஸ் ஸ்டாண்ட் வரை டூவீலரில் வந்த மேயர், பின்னர் வேறு ஒரு காரில் ஏறி, பல்லடம் சென்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)